India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தங்கள் மண்ணில் இருந்து 3-ம் நாடு ஒன்று, ஆப்கனுக்கு எதிராக டிரோன் தாக்குதல் நடத்துவதை பாக்., ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நாட்டின் பெயரை கூறாமல், தங்களுடன் ரகசிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆப்கனில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை கைப்பற்ற முயற்சிப்போம் என டிரம்ப் கூறியது மற்றும் பாக்., -USA இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்பட்டு வரும் நிலையில், இந்த ரகசியத்தை உடைத்துள்ளது.

மொன்தா புயலையொட்டி புதுச்சேரி ஏனாமில் நாளை(அக்.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மழை பாதிப்பால் சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதும் மழை நீடிப்பதால் நாளை விடுமுறை அளிக்க மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்கள் விரைவில் அறிவிக்க உள்ளன.

புதிய ஆடைகளை வாங்கிய உடன் அணிந்தால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் வாங்கிய ஆடையை வேறொருவர் ட்ரையல் பார்த்திருக்கலாம். அவர்களின் வியர்வை ஆடையில் பட்டிருக்கும். இதை அப்படியே நாம் ஒருநாள் முழுவதும் அணிந்திருந்தால் Rashes, allergy போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம். இதனால் புதிய ஆடைகளை துவைத்து, வெயிலில் காயப்போட்ட பின்பு அணிவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE.

கரூர் துயரினால் முடங்கியிருந்த விஜய், தற்போது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தவெக அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை அவர் நியமித்துள்ளார். N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 28 பேர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிற்கு தவெக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் தன்னை அணியில் தேர்ந்தெடுக்காததற்கு, ஷமி உள்ளூர் போட்டியில் பதிலடி கொடுத்து வருகிறார். ரஞ்சி டிராபியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், முதல் இன்னிங்ஸில் 3, 2-ம் இன்னிங்ஸில் 5 என 8 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார். இதனால், அவரது பெங்கால் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி டிராபியில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை ஷமி கைப்பற்றியுள்ளார்.

இதுவரை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பொதுத்துறை நிறுவனமான HAL, 1988- க்கு பிறகு முதல்முறையாக உள்நாட்டில் பயணிகள் விமானத்தை தயாரிக்க உள்ளது. இதற்காக ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. PM மோடியின் UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவின் 2, 3-ம் நிலை நகரங்களை இணைக்கும் குறுகிய தூர விமான சேவைக்காக, இந்த விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.

உயிர்வாழ்வதற்காக சில உயிரினங்கள், அதன் நிறங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவையாக உள்ளன. இனச்சேர்க்கைக்கு, சுற்றுப்புற சூழலில் இணைய, வேட்டையாட, துணைகளை ஈர்க்க போன்ற விஷயங்களுக்காக நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. அவை என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் நேரில் பார்த்த உயிரினம் எது?

தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை நாதக ஏற்காது என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புலம் பெயர் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்யட்டும், ஆனால் அவர்களது மாநிலத்திற்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு நாதகவை அழைக்க மாட்டார்கள் என கூறிய அவர், சென்றாலும் எந்த பயனும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

உட்கார்ந்திருக்கும்போது கால்களை ஆட்டிக்கொண்டே இருக்கும் நபரா நீங்கள்? இதற்கு அசௌகரியம், பதற்றம் ஆகியவை ஒரு காரணமாக இருந்தாலும், மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறதாம். அதாவது முக்கியமான வேலைகளை செய்யும்போது உங்களை அலர்ட்டாக வைத்திருப்பதற்காகவே மூளை இதனை செய்வதாக மனநல நிபுணர்கள் சொல்றாங்க. 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க. உங்களுக்கு இந்த பழக்கம் இருக்கான்னு கமெண்ட்ல சொல்லுங்க.

பிஹாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு சட்டத்தில் கள்ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல், SC, ST வன்கொடுமை சட்டம் போன்றே BC-க்கும் தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். முன்னதாக, மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி அளித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.