India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை இன்று (மே 1) ₹1,792 குறைந்துள்ளது. இதனால் நேற்று ₹9,796-க்கு விற்பனையான 1 கிராம் இன்று ₹9,572-க்கும், ₹78,368-க்கு விற்பனையான 8 கிராம் ₹76,576-க்கும் விற்பனையாகிறது. நேற்று அட்சய திருதியை நாளில் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் இன்னும் 3 சிக்ஸர்களை விளாசினால், IPL-ல் 300 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைப்பார். இச்சாதனையை, இன்று RR-க்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா, நிகழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை ரோஹித், IPL-ல் 226 மேட்சுகளில் விளையாடி, 297 சிக்ஸர்களும், 617 பவுண்டரிகளையும் விளாசி இருக்கிறார். இன்று சாதிப்பாரா ரோஹித்?
எம்புரான் படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் வெளியான ‘துடரும்’ படமும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஏப்.25-ல் வெளியான அந்த படம் 6 நாட்களில் ₹100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கார் ஓட்டுநரான மோகன்லால் எதிர்கொள்ளும் பிரச்னையே படத்தில் கதைக்களம். ஃபேமிலி த்ரில்லர் கதையில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீங்க படம் பார்த்துட்டீங்களா?
சிவகாசியை காங்கிரஸிடம் இருந்து பறிப்பதில் தங்கம் தென்னரசு உறுதியாக உள்ளாரம். இதனால், காங்., சிட்டிங் எம்எல்ஏ அசோகன் கிலியில் இருக்கிறார். நலத்திட்டங்களில் தன்னை மட்டுமே அசோகன் முன்னிறுத்திக்கொள்வது மினிஸ்டருக்கு பிடிக்கவில்லையாம். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் மேயர் பதவியை திமுக எடுத்துக்கொண்டதையே சிவகாசி கதர்சட்டைகள் ரசிக்கவில்லை. சிவகாசியில் மீண்டும் ’கை’ ஓங்குமா?
நாடு முழுவதும் உள்ள பெண் MP, MLA-க்களில் 17 பேர் கோடீஸ்வரிகள் என ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. ADR அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த 17 பேரின் சொத்து மதிப்பு மட்டும் ₹10,417 கோடி என்பது தெரியவந்துள்ளது. மக்களவையில் 6 பேரும், மாநிலங்களவையில் 3 பேரும், மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் 8 பேரும் கோடீஸ்வரிகளாக உள்ளனர். இவர்களில் 143 பேர் மீது கிரிமினல் வழக்குகளும் உண்டாம். உங்க MP, MLA எப்படி?
மாதத்தின் முதல் நாளான உங்களின் வழக்கத்தில் இருந்து மாறி, இப்படி செய்து பாருங்களேன் ➤சண்டையிட்ட ஒருவரிடம் நார்மலாக பேசுங்கள் ➤கொஞ்ச தூரம் நடந்துசென்று, இயற்கையை ரசியுங்கள் ➤செல்போனை ஓரம் வைத்துவிட்டு, நேரில் நண்பர்களுடன் கொஞ்ச நேரம் செலவிடுங்கள் ➤ஒரு பறவைக்கோ/ விலங்கிற்கோ உணவளியுங்கள் ➤தெரியாத ஒருவருக்கு ஒரு சின்ன உதவியை செய்யுங்கள். நிச்சயமாக மனதில் மகிழ்ச்சி நிறையும். ட்ரை பண்ணுங்க…
மாதத்தின் முதல் நாளான உங்களின் வழக்கத்தில் இருந்து மாறி, இப்படி செய்து பாருங்களேன் ➤சண்டையிட்ட ஒருவரிடம் நார்மலாக பேசுங்கள் ➤கொஞ்ச தூரம் நடந்துசென்று, இயற்கையை ரசியுங்கள் ➤செல்போனை ஓரம் வைத்துவிட்டு, நேரில் நண்பர்களுடன் கொஞ்ச நேரம் செலவிடுங்கள் ➤ஒரு பறவைக்கோ/ விலங்கிற்கோ உணவளியுங்கள் ➤தெரியாத ஒருவருக்கு ஒரு சின்ன உதவியை செய்யுங்கள். நிச்சயமாக மனதில் மகிழ்ச்சி நிறையும். ட்ரை பண்ணுங்க…
மாதத்தின் முதல் நாளில் வெள்ளி விலை சரிவுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று (மே 1) 1 கிராம் ₹2 குறைந்து ₹109-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹1,09,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் கடந்த 4 நாள்களாக மாற்றமின்றி கிராம் ₹111-க்கு விற்பனையானது. ஆனாலும், அட்சய திருதியை நாளான நேற்று மட்டும் சுமார் ₹4,000 கோடிக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’ நாவல் திரைப்படமாகிறது. ஏற்கெனவே, அவருடைய சேத்துமான், கோடித்துணி கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டு பேசப்பட்டன. இந்நிலையில், ஒடுக்கப்பட்ட சமூக சிறுவர்களின் வாழ்வியலை பேசும் அவருடைய கூளமாதாரி நாவலை புதுமுக இயக்குநர் ராஜ்குமார் இயக்குகிறார். வெள்ளித்திரைக்காக சில மாற்றங்களுடன் எடுக்கப்படும் இப்படத்தில் புதுமுகங்கள் அதிகமாக நடிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.