News October 29, 2025

இன்று IND vs AUS முதல் டி20 போட்டி

image

ஆஸி.,வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை தொடங்குகிறது. முன்னதாக, கில் தலைமையில் விளையாடிய 3 ODI போட்டிகள் கொண்ட தொடரை, 2-1 என்ற கணக்கில் ஆஸி., கைப்பற்றியது. எனவே, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களது பிளேயிங் 11-ஐ கமெண்ட் பண்ணுங்க.

News October 29, 2025

இந்திரனின் புகழை திருட பாஜக முயற்சிக்கிறது: ஆம் ஆத்மி

image

தீபாவளியை அடுத்து டெல்லியில் காற்று மாசு அதிகமானது. இதனால் 53 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை மழை பெய்ய வைப்பதற்காக, மேக விதைப்பு நடைபெற்றது. இதனை ‘மிகப்பெரிய மோசடி’ என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. உண்மையாகவே மழை பெய்தால், அவர்கள் (பாஜக) மழைக் கடவுளான இந்திரனின் புகழை திருடக்கூடும் என்றும் அக்கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. ஏற்கெனவே சில சமயங்களில் டெல்லியில் செயற்கை மழை பொழிய வைக்கப்பட்டது.

News October 29, 2025

அது அபத்தமானது: சமந்தா

image

மற்ற நடிகைகளை போலவே நடிக்கவும், தோற்றமளிக்கவும், நடனமாடவும் கடினமாக முயற்சித்ததாக சமந்தா கூறியுள்ளார். ஆனால், அந்த நடிப்பை தற்போது திரும்பி பார்க்கையில் மிகவும் அபத்தமானதாக இருப்பதாக நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டதும், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவிலிருந்து வெளியே வந்ததும் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள் என சமந்தா கூறியிருந்தார்.

News October 29, 2025

‘பாபர் மசூதி கட்டப்படும்’: FB-ல் பதிவிட்ட வழக்கில் திருப்பம்

image

‘மீண்டும் பாபர் மசூதி கட்டப்படும்’ என்று சட்டக்கல்லூரி மாணவர், 2020-ல் FB-ல் பதிவிட்டிருந்தார். இந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி மாணவர் தரப்பில், SC-ல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த கோர்ட், வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. உ.பி.,யின் லக்கிம்பூர் கேரி கோர்ட், இந்த வழக்கை தனது சொந்த விருப்பத்தின் பேரில் பரிசீலிக்கலாம் என்றும் SC அறிவுறுத்தியுள்ளது.

News October 29, 2025

சொகுசு ரயில்களில் பயணம் செய்ய எவ்வளவு தெரியுமா?

image

இந்தியாவின் சொகுசு ரயில்கள் சுற்றுலாவுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தையும், இயற்கை அழகையும் வெளிப்படுத்தும் வகையில் பயண அனுபவங்களை வழங்குகின்றன. இந்த ரயில்களில், பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு, ஒருவார பயணமாக சென்றுவரலாம். எந்த ரயில்களில், எவ்வளவு கட்டணம் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

News October 29, 2025

இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய NDA: ராகுல் காந்தி

image

பிஹார் இளைஞர்களின் கனவு & ஆசைகளை மோடி, நிதிஷ்குமார் தலைமையிலான NDA கூட்டணி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பிஹார் எல்லா வளர்ச்சி குறியீடுகளிலும் பின்தங்கியே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிஹார் இளைஞர்களின் எதிர்காலத்தையும் மோடி – நிதிஷ் இணைந்து நாசமாக்கியதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

News October 29, 2025

Cinema Roundup: விரைவில் ‘பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள்

image

*’பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள் வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல். *யஷ்-ன் ‘டாக்ஸிக்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை ரீ-ஹூட் செய்ய படக்குழு முடிவு. *மிருணாள் தாக்கூரின் ‘டகாய்ட்’ படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. *மாரி செல்வராஜுக்கு ‘இயக்குநர் திலகம்’ என வைகோ பட்டம் சூட்டியுள்ளார்.

News October 29, 2025

அரசியலில் குதிக்கிறாரா MS தோனி?

image

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணையமைச்சர் ரக்‌ஷா கட்சே, தோனியை சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள MSD-ன் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது, விளையாட்டில் உளவியல் ரீதியான பயிற்சிக்கான மேம்பாடு & விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துதல் குறித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது.

News October 29, 2025

அக்டோபர் 29: வரலாற்றில் இன்று

image

*உலக பக்கவாத நாள்.
*1832 – பெங்களூரில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் படையினருக்கு எதிராக நடத்தப்படவிருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
*1886 – பிரிட்டிஷ் இந்திய அரசு – திருவாங்கூர் மன்னர் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.
*1931 – கவிஞர் வாலி பிறந்தநாள்.
*1950 – கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தொடர் கல்கி இதழில் முதல்முறையாக வெளிவர ஆரம்பித்தது.

News October 29, 2025

காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு

image

டிரம்ப் மத்தியஸ்தம் செய்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தம், தற்போது மீறப்பட்டுள்ளது. இஸ்ரேல் PM நெதன்யாகு, காஸாவில் உடனடியாக கடும் தாக்குதலை நடத்துமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது மீண்டும் அப்பாவி காஸா மக்கள் மீதான கொடூரத்திற்கு வித்திடும் என உலக தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

error: Content is protected !!