India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஹல்காம் தாக்குதல் இதயத்தை உலுக்குவதாக நடிகை ஆண்ட்ரியா வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், இதன் பிறகு அதீத கண்காணிப்பிற்கு உள்ளாகப்போகும் காஷ்மீர் மக்களை நினைத்து இதயம் கணப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இச்சூழலில், இச்சம்பவத்தால் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம் / சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களுக்கு நாம் இரையாகி விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
SRH அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி MI 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த SRH அணியில் கிளாசனை(71) தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களிலேயே நடையை கட்டினர். ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 144 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய MI, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. ரோஹித் சர்மா(70) அரைசதம் விளாசியதால், அந்த அணி ஈசியாக வெற்றி பெற்றது.
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பற்றிய தகவல் தருவோருக்கு ₹20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது. பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் சுட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, வாகா எல்லையை மூடுவது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், சிந்து, செனாப், ஜீலம் நதிகளின் நீரைப் பயன்படுத்தும் வாய்ப்பை பாக்., பெற்றது. விவசாயம் உள்பட அனைத்து தேவைகளுக்கும் இந்த ஆறுகளை பாக்., நம்பியுள்ளது. இந்நிலையில், சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா செக் வைத்துள்ளதால், பாக்.கின் பல பகுதிகள் பாலைவனங்களாக மாற வாய்ப்புள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 25 இந்தியர்கள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர்கள் விரைவில் நலம்பெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க நாளை மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஹாலிவுட்டின் பிரபல இளம் நடிகை சோஃபி நிவெய்டி (24), அகால மரணமடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மம்மோத் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலக அளவில் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர் சோஃபி. அதன்பின் பல படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், தீவிர மனநிலைக் கோளாறால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். RIP சோஃபியா!
நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கண்கள் மஞ்சளாக மாற 3 காரணங்கள் உள்ளன. 1) கல்லீரல் ரத்த சிவப்பணுக்களை உடைப்பதால், எந்தவொரு கல்லீரல் செயலிழப்பும் சிரோசிஸை ஏற்படுத்தும். இதனால் கண்கள் மஞ்சளாகும். 2) பித்த நாளங்கள் பித்தத்தை எடுத்துச் செல்ல முடியாதபோது, அது படிந்து, கண்கள் மஞ்சள் ஆகும். 3) பித்த நாளத்துடன் சேர்ந்து, கணையத்திலிருந்து வரும் குழாய் சிறுகுடலுக்கு வழிவகுக்கிறது. அது பாதிக்கப்பட்டாலும் கண்கள் மஞ்சளாகும்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த நியூயார்க் மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரயில் பெட்டியில் ஓர் ஆணின் பிணம் கிடந்துள்ளது. அதன் அருகில்வந்த ஆண் பயணி ஒருவர், அதன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு துழாவியுள்ளார். பின் சட்டென, சடலத்துடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி தப்பிவிட்டார். பிணத்துடன் உறவில் ஈடுபடும் அளவுக்கு மனிதரின் மனம் மாசடைந்துவிட்டதன் காரணம் என்ன?
Sorry, no posts matched your criteria.