News August 11, 2025

FLASH: நடிகை மீரா மிதுன் மனநல ஹாஸ்பிடலில் அனுமதி

image

மன அழுத்தம் காரணமாக நடிகை மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 2021-ல் பட்டியல் சமூக மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், கோர்ட்டில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் இந்த தகவலை கூறியுள்ளனர்.

News August 11, 2025

‘உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் இவர் தான்’

image

உலகின் தலைசிறந்த WK யார் என்றால் இப்போதைய ரசிகர்கள் தோனி என்பார்கள். ஆனால், சையது கிர்மானி தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்று Ex கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார். கிர்மானியின் சுயசரிதை நூலான ‘Stumped: Life Behind and Beyond The Twenty-Two Yards’ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், 4 ஸ்பின்னர்கள் பந்துவீச கீப்பிங் செய்தவர், உலகக் கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்தவர் எனப் புகழ்ந்தார்.

News August 11, 2025

பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? EPS புதிய விளக்கம்

image

நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், ஸ்டாலினுக்கு ஏன் பயம் வருகிறது என EPS கேள்வி எழுப்பியுள்ளார். தளியில் பேசிய அவர், TN மக்களுக்கு தீங்கு செய்யும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே ஒத்த கருத்துடைய இரு கட்சிகள்(ADMK – BJP) கூட்டணி அமைத்துள்ளது என்றார். மேலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை எளிமையாக நிறைவேற்ற முடியும் எனவும் கூறினார்.

News August 11, 2025

தோல்வியால் அடாவடியில் இறங்கிய பாக்., அரசு

image

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் களத்தில் தோற்ற பாகிஸ்தான், இந்திய தூதரக ஊழியர்களிடம் அத்துமீறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்.கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் அத்துமீறி நுழைவது, திடீர் சோதனை செய்வது என தொல்லை கொடுப்பதுடன், அத்தியாவசியமான கேஸ், தண்ணீர் சப்ளையை கூட தடுப்பதாக கூறப்படுகிறது. இது சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறானது என இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

News August 11, 2025

தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ஆதரவு!

image

சென்னையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். பனையூரில் விஜய்யை சந்தித்த பிறகு பேசிய போராட்ட குழுவினர், விஜய் போராட்ட பந்தலுக்கு நேரில் வர விரும்பியதாகவும், ஆனால் டிராஃபிக் பிரச்னை ஏற்படும் என்பதால் தாங்கள் இங்கு வந்ததாகவும் கூறினர். மேலும், முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் கூறினர். இது DMK அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

News August 11, 2025

மழைக்காலத்தில் இருமல் பிரச்சனையா?

image

மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
*தீராத இருமலுக்கு தேன் மிகச்சிறந்த மருந்து. தொண்டையின் உள்பகுதியில் இருக்கும் புண் மற்றும் அரிப்பை தேன் குணப்படுத்தும். *உப்புநீரில் வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டையில் உள்ள நோய்க்கிருமிகள் அழிந்து, இருமல் தீரும். *சளி, இருமலை குணப்படுத்த இஞ்சியும் உதவும். இதை இஞ்சி டீ, இஞ்சி சாறாகவும் உட்கொள்ளலாம்.

News August 11, 2025

உக்ரைனில் அமைதி திரும்ப உதவுவதாக PM மோடி உறுதி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி PM மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கியதாகவும், இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட அனைத்து உதவிகளையும் செய்வேன் எனவும் உறுதி அளித்ததாக PM மோடி தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புதின் இந்தியா வரவுள்ள நிலையில், ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை குறைக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

News August 11, 2025

கனமழை வெளுக்கும்.. கவனமா இருங்க மக்களே!

image

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செ.பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!

News August 11, 2025

தோனி வாக்குமூலம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

₹100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞரை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. IPL சூதாட்ட வழக்கு தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்து கூறியதாக IPS அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியாவுக்கு எதிராக 2014-ல் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நீதிபதி CV கார்த்திகேயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News August 11, 2025

கர்நாடகா அமைச்சர் ராஜினாமா? இதுதான் காரணம்!

image

கர்நாடக அமைச்சர் ராஜண்ணா <<17370523>>ராஜினாமா<<>> செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் ‘வாக்குத்திருட்டு’ போராட்டம் பற்றி பேசிய அவர், மஹாதேவ்புராவில் நடந்த சம்பவம் மாநிலத்தில் காங்., ஆட்சியில் இருக்கும்போதே நடந்துள்ளது. நம் கண்முன்னே இந்த முறைகேடு நடந்துள்ளதற்கு கட்சி வெட்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். அவரை பதவி விலகச் சொல்லி காங்., மேலிடத்தில் இருந்து அழுத்தம் வர, இந்தப் பேச்சு தான் காரணமாம்.

error: Content is protected !!