India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் துயரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த விஜய், அடுத்தக்கட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அவரது அரசியல் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கும் என CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவின்படி, அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் விதிகளை அறிவித்தவுடன், உரிய அனுமதி பெற்று விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை, பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதி என்று CM ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பரில் SIR நடவடிக்கை மேற்கொள்வது சவால்கள் நிறைந்தவை என்று அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும், மக்களின் வாக்குரிமையை பறிக்க துணியும் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழகம் போராடும், வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

SBI, IOB உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை 20%-ல் இருந்து 49%-ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், RBI-யும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம், மூலதனம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு நிகராக தனியார் பங்குகள் வைத்திருக்கலாமா? கமெண்ட் பண்ணுங்க.

கடல் உணவுகளில் மிகவும் சுவையான இறால் பலருக்கும் பிடித்த ஒன்று. இறால் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சில முக்கியமான நன்மைகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அதில், விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், வேறு ஏதேனும் நன்மைகள், உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

கரூர் துயரத்தில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி, விஜய் அனுப்பிய ₹20 லட்சத்தை அவருக்கே திருப்பி அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவரை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் கூறிய நிலையில், சங்கவியை அழைத்துச் செல்லவில்லை எனத் தெரிகிறது. எனவே, தனக்கு பணம் வேண்டாம், விஜய் ஆறுதல் தெரிவித்தால் போதும் என அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

2025-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர். அவர்கள் யார்? எத்தனை சதம் அடித்தனர்? என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை ஆச்சரியப்பட வைத்த வீரர் யார்? கமெண்ட்ல சொல்லுங்க.

அனைத்து கிராமப்புற பள்ளிகளுக்கும் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நவ.9-ல் நடைபெறவுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை நாளை முதல் டவுன்லோடு செய்யலாம். இதில், மாவட்டத்திற்கு 100 பேர் (50 மாணவர்கள், 50 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு ஆண்டிற்கு ₹1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க நவ.4 கடைசி தேதி. SHARE IT.

67-ல் காங்., வீழ்ந்த மாநிலங்களில் பிஹாரும் TN-ம் முதன்மையானவை. பிஹாரில் லோஹியா சீடர்கள் (லாலு, நிதிஷ்) களத்தை பிடித்தனர். TN-ல் அண்ணாவின் தம்பிகள் (கருணாநிதி, எம்ஜிஆர்) ஆட்சியை தமதாக்கினர். ஜெ., மறைவுக்கு பிறகு அதிமுக vote bank சரிந்தது போல, பிஹாரில் நிதிஷின் JD(U), பாஜகவிடம் களத்தை இழந்துவருகிறது. பிஹாரில் இருதுருவ அரசியல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், TN-ம் தற்போது அதை நோக்கி நகர்ந்து வருகிறது.

சோசலிச கட்சியான JD(U) உடன் பயணித்தபடியே, பாஜக Hindutva-வை மாற்றாக முன்வைக்கிறது. TN-ல் திராவிட கட்சியான அதிமுகவுடன் கைகோர்த்தபடி, களத்தை திராவிடம் Vs இந்துத்துவம் என மாற்ற முனைகிறது. மாநிலத்தில் INDIA கூட்டணியை வழிநடத்தும் DMK, RJD அடுத்த தலைமுறையை (உதய், தேஜஸ்வி) கைகாட்டிவிட்டன; பாஜக எதிர்ப்பில் உறுதிகாட்டினாலும், எதிர்க்கட்சியாக மாநில கட்சிகளே (ADMK, JD(U)) தொடர வேண்டுமென விரும்புகின்றன.

உண்ணும் உணவு, தண்ணீர் வழியாக தினம் தினம் மனிதனின் உடலில் லட்சக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கிறது. இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகிறது. எனவே, முடிந்த வரை அனைவரும் (குறிப்பாக கர்ப்பிணிகள்) பிளாஸ்டிக் பொருள்களை தவிருங்கள். இல்லையென்றால் அவை உங்கள் ரத்தத்தில் கலந்து தாய்ப்பால் வழியாக உங்கள் குழந்தையின் உடலுக்குள் செல்லும். அடுத்த தலைமுறையை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.