News October 27, 2025

வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை நிலவரம்

image

சர்வதேச நிலையற்ற தன்மை, அமெரிக்கா – சீனா வர்த்தக மோதல் உள்ளிட்ட காரணிகளால், கடந்த வார இறுதியில் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. அதன்படி, மும்பை குறியீட்டு எண் Sensex, 566.96 புள்ளிகள் உயர்ந்து 84,778 புள்ளிகளுடனும், தேசிய குறியீட்டு எண் Nifty50, 170.90 புள்ளிகள் உயர்ந்து 25.966- புள்ளிகளுடனும் நிறைவடைந்துள்ளன.

News October 27, 2025

இன்று இரவு 12 மணி முதல் மொத்தமாக மாறுகிறது

image

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 2-ம் கட்ட SIR மேற்கொள்ளப்படும் என ECI அறிவித்துள்ளது. அதனால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்வது நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு Enumeration Form வழங்கப்படும். அதில் உள்ள விவரங்கள் 2003 வாக்காளர் பட்டியலோடு ஒத்துபோனால், மேலதிக ஆவணங்களை சமர்பிக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

News October 27, 2025

சற்றுமுன்: விஜய்க்கு ஆதரவு

image

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரம் அழைத்து, விஜய் ஆறுதல் தெரிவித்ததற்கு பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். கரூர் சென்றால் விஜய்க்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் மாமல்லபுரத்திற்கு அழைத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருக்குமோ என்ற அச்சத்தில் விஜய் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

News October 27, 2025

SIR ஏன் நடத்தப்படுகிறது தெரியுமா? ECI விளக்கம்

image

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன் மேற்கொள்ளப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். 1951 முதல் 2004 வரை 8 முறை மட்டுமே SIR நடத்தப்பட்டதாகவும், கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னர் 2002 – 2004-ல் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தேர்தலுக்கு முன்பு வாக்காளர் சரிபார்ப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

BREAKING: அடுத்ததாக 12 மாநிலங்களில் SIR

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக ECI அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். முதற்கட்டமாக பிஹாரில் வெற்றிகரமாக SIR நடத்தப்பட்டதாகவும், 2-ம் கட்டமாக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR நடைபெற உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் என்றும் கூறியுள்ளார்.

News October 27, 2025

IND Vs SA: தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு

image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான, தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான அணியில் டெவால்ட் பிரெவிஸ், சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சென், ரபாடா, கேஷவ் மஹராஜ், ரியான் ரிக்கல்டன், எய்டன் மார்க்ரம் உள்ளிட்ட 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவ.14-ம் தேதி கொல்கத்தாவிலும், நவ.22-ம் தேதி கவுஹாத்தியிலும் நடைபெறவுள்ளது.

News October 27, 2025

TN அரசு அதிகாரிகளை சந்தேகிக்கிறதா திமுக?: BJP

image

SIR தொடர்பாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில், வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபடும் TN அரசு அதிகாரிகளை, திமுக அரசு சந்தேகிக்கிறதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். RK நகர் இடைத்தேர்தலின் போது போலி வாக்காளர் குறித்து திமுக வழக்கு தொடர்ந்தது மறந்து விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தவறுகளை மறைக்கவே, திமுக SIR-ஐ கையில் எடுத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News October 27, 2025

BREAKING: ரஜினி வீட்டில் குவிந்த போலீஸ்.. பதற்றம்

image

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் வந்த நிலையில், அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். எனினும் ரஜினிகாந்தின் வேண்டுகோளை ஏற்று போலீசார் அங்கு சோதனை நடத்தவில்லை. 2 வாரங்களுக்கு முன்பாக, இதே போல அவரது வீட்டிற்கு புரளியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

News October 27, 2025

இந்தியாவை மீண்டும் மீண்டும் சீண்டும் வங்கதேச தலைவர்

image

வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனஸ் மீண்டும் ஒருமுறை இந்தியாவை வம்பிழுத்துள்ளார். பாக்., தளபதிக்கு அவர் பரிசளித்த மேப்பில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேசத்தின் மாநிலங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. முன்னதாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செக் வைக்க, சீனா வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தார்.

News October 27, 2025

AI-ஆல் உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோ: சிரஞ்சீவி அதிர்ச்சி

image

தனது புகைப்படத்தை வைத்து AI-ஆல் உருவாக்கப்பட்ட, ஆபாச வீடியோ இணையதளத்தில் பரவி வருவதாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஐதராபாத் போலீஸில் புகாரளித்துள்ளார். உடனே அந்த வீடியோக்களை நீக்குமாறும், இதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தன்னிச்சையாக நடக்கவில்லை எனவும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!