India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேற்று(ஆக.11) ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(ஆக.12) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 368 புள்ளிகள் சரிந்து 80,235 புள்ளிகளிலும், நிஃப்டி 97 புள்ளிகள் சரிந்து 24,487 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. Reliance, Infosys, TCS, HDFC Bank, M&M உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர். நீங்கள் வாங்கிய Share லாபம் தந்ததா?
பெண்கள் 30 வயதை அடைந்து விட்டால், இந்த டெஸ்ட்டுகளை செய்து கொள்வது அவசியம்.
➤Mammography: மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
➤Thyroid Test: எடை அதிகரிப்பு, முடி உதிர்தல் ஆகியவற்றை கண்டறிய உதவும் டெஸ்ட்.
➤Pap Smear test: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய உதவும்.
➤Complete blood count (CBC): ரத்த சோகை குறித்து அறிந்து கொள்ள, இந்த டெஸ்ட் செய்யுங்கள். SHARE IT.
TN அரசின் ‘<<17336334>>தாயுமானவர் திட்டம்<<>>’ தேமுதிக மற்றும் விஜயகாந்திற்கு கிடைத்த வெற்றி என பிரேமலதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2006 தேர்தலின்போது வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தேமுதிக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த திட்டத்தையே தற்போது TN அரசு முதற்கட்டமாக நிறைவேற்றியுள்ளதாக கூறிய பிரேமலதா, அன்று ஏளனமாக சிரித்தவர்கள் இன்று எங்கே போனார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகிலேயே அதிக நீரை உறிஞ்சுவது இந்த டேட்டா செண்டர்கள் தான். AI-ஐ ட்ரெயின் செய்வதற்கும், பதில்களை கொடுக்கவைப்பதற்கும், தரவுகளை சேமிப்பதற்கும் டேட்டா செண்டர்கள் இன்றியமையாதது. உதாரணத்திற்கு, 100 மெகாவாட் கொண்ட டேட்டா செண்டர் ஒரு நாளுக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீரை செலவழிக்கிறதாம். எனவே AI-யிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு 10 மி.லி. தண்ணீர் செலவாகிறதாம். பார்த்து கேள்வி கேளுங்க மக்களே..
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக லோக்சபா தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 146 MP-க்கள் கையெழுட்திட்டு வழங்கிய தீர்மானத்தின் அடிப்படையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமாம். தீ விபத்தின் போது வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.
2024 – 25 நிதியாண்டில் 2.17 லட்சம் என்ற எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், ₹500 கள்ள நோட்டுகள் 1.17 லட்சம், 200 கள்ள நோட்டுகள் ₹32 ஆயிரம், 100 நோட்டுகள் ₹51 ஆயிரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளின் தரத்தை மேம்படுத்த RBI-க்கு வலியுறுத்தி இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளியே இன்னும் எவ்வளவு இருக்குதோ?
‘பரலோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கிய தேர்தல் ஆணையமே பார்லிமென்ட்டில் எங்களுக்கு பதில் சொல்’ என ECI-க்கு MP சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 124 வயதான மின்தா தேவி எப்படி பிஹாரின் சிவான் தொகுதிக்கான SIR பட்டியலில் உள்ளார் எனவும் இது வெறும் எழுத்தர் பிழை அல்ல; மெகா மோசடிக்கான சான்று என்றும் சாடியுள்ளார். மின்தா தேவியின் போட்டோவுடன் MP மாணிக்கம் தாகூர் அவைக்கு சென்றுள்ளார்.
➤வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக குடை, ரெயின் கோட், ஜர்க்கின் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள்.
➤மெழுகுவர்த்தி, டார்ச் கையிருப்பில் இருப்பது நல்லது.
➤வீட்டில் வயதானவர்கள், குழந்தைகள் இருந்தால் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.
➤உடைந்த சேதமடைந்த மின்சார சாதனங்களை சரி செய்து கொள்ளவும்.
➤வீட்டை சுற்றி குப்பை இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது தொற்று நோய் பரவாமல் தடுக்கும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்த 20- 28 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ₹15,000/- வரை ஸ்டைபண்ட் வழங்கப்படும். வரும் 20-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். முழு தகவலுக்கு <
வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான <<17356042>>அபராத வட்டியை தள்ளுபடி<<>> செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக, வட்டி முதலாக்கத்தின் (interest on capitalization) மீது விதிக்கப்பட்டுள்ள வட்டியும் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலுவையை செலுத்திவிட்டு சொத்து விற்பனை பத்திரத்தை பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.