News October 27, 2025

புயல் அலர்ட்: 20 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

‘மொன்தா’ புயல் எதிரொலியாக அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னை, செங்கை, கடலூர், கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருக்கவும். SHARE IT.

News October 27, 2025

உடல் வலியை குறைக்க இந்த கஞ்சியை குடிங்க!

image

முன்பெல்லாம் வீட்டில் சத்தான உணவுகளை செய்து சாப்பிடுவோம். ஆனால் இன்றைய சூழலில் எல்லாம் Fast Food தான். இதனால் பலரும் பலவீனமாக இருக்கிறார்கள். இதற்கு உளுந்தங்கஞ்சியை ரெகுலராக சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். வாரத்தில் 2 முறையாவது இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் அவர்கள், இதன் மூலம் மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி உள்ளிட்டவைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

News October 27, 2025

மீண்டும் திமுக ஆட்சி.. சிரித்தபடி பதிலளித்த OPS

image

சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த OPS-சிடம் ‘திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என CM கூறி இருக்கிறாரே’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பதிலளித்தார். திமுகவா! என்று அழுத்தமாக கேட்ட உடனே, சுதாரித்துக் கொண்ட அவர், மக்கள் பேசிக் கொள்கிறார்கள்; என் மீது பழியை போட்டுவிடாதீங்க சாமி! என சிரித்துக் கொண்டே கூறினார்.

News October 27, 2025

ஒரு மூத்தவனா சொல்றேன்… கேளுங்க: சீமான்

image

நடிக்கும்போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்ற போக்கு கொடுமையானது என சீமான் தெரிவித்துள்ளார். வேறு எங்கேயும் நடக்காத இது, இங்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அரசியல் என்பது வாழ்வியல் என்று குறிப்பிட்டுள்ளார். தம்பி, தங்கைகளுக்கு ஒரு மூத்தவனாக சொல்கிறேன், அரசியலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

News October 27, 2025

வீராங்கனைகள் மீதும் தவறு.. அமைச்சரின் சர்ச்சை கருத்து

image

இந்தூரில் ஆஸி., கிரிக்கெட் அணி வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதற்கு அவர்களே தான் காரணம் என்பது போல ம.பி., பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும் என்ற அவர், யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கிரிக்கெட்டர்கள் பிரபலமானவர்கள் என்பதால், அவர்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

News October 27, 2025

விவசாயிகளுக்கு 80% மானியம் தரும் அரசு திட்டம்

image

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதனால் அவர்களின் நேரமும், உழைப்பும், பணமும் மிச்சமாகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது https://www.agrimachinery.nic.in/ -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மானியத்துக்கு தகுதி பெற்றால் உங்கள் மொபைல் நம்பருக்கு SMS அனுப்பப்படும். SHARE.

News October 27, 2025

சிரஞ்சீவி படத்தில் நடிக்கிறாரா கார்த்தி?

image

நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே நானியின் ‘Hit-3’-ல் கேமியோ ரோல் செய்த அவர், ‘Hit-4’-ல் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் சிரஞ்சீவி, இயக்குநர் பாபி இணையும் அடுத்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

News October 27, 2025

ASEAN மாநாடு: USA அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர்

image

மலேசியாவில் நடைபெற்று வரும் ASEAN உச்சிமாநாட்டில், USA வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். நேற்று, பாக்.,கை விட <<18114416>>இந்தியாவின் நட்பு<<>> முக்கியம் என ரூபியோ தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இருவரும் சர்வதேச அரசியல், வர்த்தக ஒப்பந்தம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

News October 27, 2025

BREAKING: மன்னிப்பு கேட்டார் விஜய்

image

மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய், உங்களின் குடும்பத்தில் ஒருவனான என்னை நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி, வேதனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்போதும் தானும், கட்சியும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதியளித்துள்ளார்.

News October 27, 2025

ஹாஸ்பிடலில் சீரியஸாக இருக்கிறாரா ஷ்ரேயஸ்?

image

ஷ்ரேயஸுக்கு ஏற்பட்டிருக்கும் Internal Bleeding எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? அதிகமாக ரத்த கசிவு ஏற்பட்டால் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் தடைபடும், இதனால் உறுப்புகள் செயலிழந்து போகலாம். மூளை, மார்பு, வயிற்று பகுதிகளில் ஏற்படும் ரத்த கசிவுகளால் உயிரே பறிபோகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், <<18116578>>ஷ்ரேயஸுக்கு விலா எலும்பில்<<>> காயம் ஏற்பட்டிருப்பதால் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

error: Content is protected !!