India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கர்நாடகாவில் பாத்ரூமில் இருந்த கேஸ் கீசரில், LPG கேஸ் கசிந்து, அதை சுவாசித்த குல்ஃபாம், தாஜ் என்ற 2 சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். நீங்கள் இதை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். யூனிட் வெளியே நிறுவப்பட வேண்டும், பயன்பாட்டில் இல்லாத போது ஆஃப் செய்ய வேண்டும், கேஸ் கசிகிறதா என அடிக்கடி சோதிக்கவும் கூறுகின்றனர்.

தற்போது இருக்கும் வாழ்வியல் முறை, உணவு பழக்கங்களால் பருவமடைந்த உடன் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை பற்றிய போதிய அறிவு பள்ளியில் படிக்கும் அவர்களுக்கு இருக்காது என்பதால், பெற்றோர்கள்தான் கவனிக்கணும். உங்கள் பிள்ளைக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, முகங்களில் முடி, அதீத வலி, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் இருக்கா என்பதை தெரிஞ்சிக்கோங்க. டாக்டரை அணுகினால் சீக்கிரமே சரி செய்யலாம். SHARE.

இதுவரை புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கி வந்த AI, தற்போது இசைத்துறையிலும் கால் பதிக்க உள்ளது. எழுத்து மற்றும் ஆடியோ குறிப்புகளில் இருந்து இசையை உருவாக்கும் புதிய AI Tool-ஐ OpenAI உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, USA-ல் உள்ள புகழ்பெற்ற ஜூலியார்ட் கலை பள்ளி மாணவர்களுடன் OpenAI ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இசைத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.

KKR அணியின் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஐபிஎல் சாம்பியனான KKR, கடந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே வென்று 8-வது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகினார். இந்நிலையில், அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ள KKR நிர்வாகம், முதற்கட்டமாக அபிஷேக் நாயரை பயிற்சியாளராக நியமிக்கவுள்ளது.

ரம்மியமான இயற்கை சூழலை கொண்ட ஏராளமான இடங்கள் தென்னிந்தியாவில் உள்ளன. இங்கு அதிகளவிலான மக்கள் செல்வதில்லை. ஆனால், இந்த இடங்களுக்கு கட்டாயம் ஒருமுறை செல்ல வேண்டும். இங்கு உள்ள இயற்கை சூழல் நம்மை பிரமிக்க வைக்கும். அது எந்தெந்த இடங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு முக்கிய பாதுகாப்பு விதியை அமல்படுத்தியுள்ளது. இனி தயாரிக்கப்படும் பைக், ஸ்கூட்டர் அனைத்திலும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்(ABS) கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை பிரீமியம் பைக்குகளில் மட்டுமே ABS அம்சம் இருந்து வருகிறது. இந்த அறிவிப்பால் சாலை விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT.

சவுதியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பலுசிஸ்தானை மறைமுகமாக தனிநாடு என்று குறிப்பிடும் வகையில் சல்மான் கான் பேசியிருந்தார். இதையடுத்து, அவரை கண்காணிக்கப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் தனி நாடு கேட்டு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

பிஹார் எதிர்க்கட்சிகளின் CM வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், ₹50 லட்சத்திற்கு காப்பீடு திட்டம். முடி திருத்தம் செய்பவர்கள், தச்சர்கள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக, குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.

ஆஸி.,க்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசினார். இதன்மூலம், அனைத்து ஃபார்மெட்களிலும் ஓபனிங் இறங்கி இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்த வீரராக அவர் உருவெடுத்துள்ளார். ரோஹித் 15,787 ரன்களுடன் முதலிடத்திலும், சேவாக் 15,758, சச்சின் 15,335 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். 2007-ல் ரோஹித் அறிமுகமானாலும், 2013 முதலே ஓபனிங் இறங்கி விளையாடி வருகிறார்.

திரைப்படங்கள் பார்ப்பதில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு ரசனை இருக்கும். அந்த வகையில் பேய் படங்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அப்படிப்பட்ட, அதிபயங்கரமான டாப்-10 பேய் படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்த்து, உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
Sorry, no posts matched your criteria.