India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு சேதத்திற்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேனியில் வெள்ள பாதிப்புகளை கணக்கெடுத்த அதிகாரிகள், நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ₹17,000, இதர நவதானிய பயிர்களுக்கு ₹13,000, வாழை, திராட்சை போன்றவற்றிற்கு ₹22,500 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் லட்சுமி படம் அல்லது விக்கிரகத்தை வடக்கு திசையில் இருந்து தெற்கு பார்த்தபடி வைக்க வேண்டுமாம். அதுவே, மங்களகரமானது என சொல்லப்படுகிறது. இதுதவிர, தாமரை மலரில் இருக்கும் லட்சுமி படத்தை இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கை உள்ளது. தவறுதலாக கூட வடக்கு பார்த்தபடி வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படலாம். இதிலிருந்து அவர்களை பாதுகாக்க இந்த சிம்பிள் வழிகளை செய்யுங்கள் போதும். ➤தண்ணீர் தேங்கும் காலி கப்கள், டயர்கள், காலி பாட்டில்களை அப்புறப்படுத்துங்கள் ➤குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவியுங்கள் ➤ஜன்னல்களில் கொசு வலை போடுங்கள் ➤சத்தான, சூடான உணவுகளை கொடுங்கள். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

மைசூரிலிருந்து நெல்லை, ராமநாதபுரம், காரைக்குடி செல்லும் வாராந்தர சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூரு – திருநெல்வேலி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் அக்.27-ல் இருந்து நவ.25-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதேபோல் மைசூரு – காரைக்குடி இடையேயான ரயிலும் அக்.30 முதல் நவ.30 வரை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று(அக்.26) கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், ‘Montha’ புயல் நாளை மறுநாள் ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்போது தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

காலை எழுந்ததும் முதல் 1 மணி நேரம் 20-20-20 என்ற ரூலின் படி, செய்யும் சில வேலைகள் வாழ்க்கையை மாற்றும் என்கின்றார், The Power of 5 AM புத்தகத்தை எழுதிய ராபின் ஷர்மா. முதல் 20 நிமிடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். அடுத்த 20 நிமிடங்களில் தியானம் பண்ணனும். 3-வது 20 நிமிடங்களில் ஊக்கம் அளிக்க கூடிய புத்தகத்தை படிக்கவோ, Podcast கேட்கவோ சொல்கிறார். இதனை 21 நாள்கள் செய்து தான் பாருங்களேன்.

தனித்துவமான நடிப்பால் பலரையும் தன்வசப்படுத்தியர் நடிகை துஷாரா விஜயன். சார்பட்டா பரம்பரையில் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக மாறினார். படங்களில் மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் ரசிகர்களை கவர போட்டோஸை பகிர்வது அவரது வழக்கம். அப்படி பட்டாம் பூச்சி போல் பல வண்ணங்களில் மின்னும் ஆடையுடன், அவர் பகிர்ந்த போட்டோஸுக்கு லைக்கள் பறக்கின்றன. மேலே SWIPE செய்து பாருங்கள்.

உங்களுடன் ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று மட்டும் சொல்லும் திமுக, மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அரியலூரில் பரப்புரை செய்த அவர், ஸ்டாலின் ஆட்சியின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்டில் அரசு ஹாஸ்பிடலின் அலட்சியத்தால் 5 குழந்தைகளுக்கு HIV நோய் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றும்போது இந்த தவறு நடந்துள்ளதை, விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், ரத்த வங்கியில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததது கண்டறியப்பட்டுள்ளது.

‘பைசன்’ படக்குழுவை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாரிசெல்வராஜ் தனது படங்களில் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை என்றும், இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருப்பதாகவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.