India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒரு வாரமாக நடந்து வந்த ஆப்கன் – பாக் போர் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இரு நாடுகள் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்கன் பதிலடி கொடுக்கப்படும் என கூறியதால், நிலைமை கைமீறி போய்விடக்கூடாது என்பதற்காக கத்தார் & துருக்கி மத்தியஸ்தம் செய்தது. இந்நிலையில், போர் முடிவுக்கு வந்துள்ளது.
சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மந்தாரை செடியின் பட்டையை இடித்து, நீரில் சுண்டக்காய்ச்சி குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும் ■மந்தாரை இலைகள் வாதநோய், தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது ■கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றுக்கு மந்தாரை இலை சிறந்த மருந்து ■காயங்கள், கட்டிகளுக்கு மந்தாரை இலைச்சாறு மருந்தாகப் பயன்படுகிறது.
அதிமுக கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மாற்றுக்கட்சிகளில் முக்கிய முகமாக இருப்பவர்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலையில், அதிமுகவில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் 6,15,992 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி சொத்து வரி முறைகேடு புகார்கள் எழுந்ததை அடுத்து மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அப்பதவிக்கான ரேஸில் 5 பேர் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 79 – வது வார்டு கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ, 32 வது வார்டு விஜய மௌசுமி, ரோஹினி, வாசுகி சசிகுமார் ஆகியோர் பெயரை தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
முதல் ODI-யில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ODI-ல் முதல் முறை கேப்டனாக சுப்மன் கில் அணியை வழிநடத்தவுள்ளார். இந்திய அணி: கில், ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், KL ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், சிராஜ். இந்த மேட்ச்சில் இந்தியா வெற்றி பெறுமா?
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றது. தீபாவளி பண்டிகையையொட்டி முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலையில், ஒரு முட்டை 10 காசு உயர்ந்து ₹5.25-க்கும், சென்னையில் ₹5.90-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், கறிக்கோழி உயிருடன் விலை மாற்றமின்றி Kg ₹100-க்கும் விற்பனையாகிறது.
தமிழக நலன் குறித்து அக்கறையில்லாமல் மத்திய அரசுடன் பகைமை பாராட்டுகிறது திமுக என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சொத்துவரி, மின் கட்டண உயா்வு குறித்து கேள்வி எழுப்பினால், மத்திய அரசு நிதி தராததே காரணம் என தமிழக அரசு சொல்கிறது என்றார். மேலும், ஊரக வேலை உறுதி திட்ட நிதியை தமிழகத்துக்கு திமுகவால் பெற முடியவில்லை எனவும், தனிநபராக டெல்லிக்கு சென்று EPS இதை செய்துமுடித்தார் எனவும் அவர் கூறினார்.
நெல்லை, விருதுநகர், தேனி, குமரி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, மயிலாடுதுறை, தி.மலை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிஹார் தேர்தலில் போஜ்புரி நடிகை சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிராக் பஸ்வானின் LJP (RV) கட்சி சார்பாக அவர் போட்டியிட இருந்தார். சிறிய தவறால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மறுபரிசீலனைக்காக மீண்டும் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.