India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
26 பிராந்திய கிராம வங்கிகளின்(RRB) ஒருங்கிணைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. ஏப்.8-ல் நிதி சேவைகள் துறை ‘ஒரே நாடு ஒரே RRB’ என்ற கொள்கையின் அடிப்படையில் RRB வங்கிகளை ஒருங்கிணைப்பதாக அறிவித்தது. இந்த இணைப்புக்குப் பிறகு, 22,000-க்கும் மேற்பட்ட கிளைகளை உள்ளடக்கிய 28 RRB வங்கிகள் மட்டும் இருக்கும். இதன்மூலம், கிராமப்புற மக்களுக்கான கடன் சேவையில் RRB ஒருங்கிணைந்து செயல்படும் என கூறப்படுகிறது.
கர்நாடகாவில் பீர் விலை உயருமென தகவல் வெளியாகியுள்ளதால் மதுப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். கர்நாடகாவில் தரமான பீர் கிடைக்கும் என்பது பீர் விரும்பிகளின் நம்பிக்கை. பீர் அருந்துவதற்காகவே எல்லை தாண்டி சென்று வரும் மதுப்பிரியர்களும் உண்டு. இந்நிலையில், கலால் வரி உயர்த்தப்பட்டதால் பாட்டிலுக்கு ₹10 உயர்த்தப்படும் என்ற தகவல், அவர்கள் மனதை நோகடித்துள்ளது. இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
தனது உதட்டை ஹீரோ கடித்து விட்டதாக பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் கூறியுள்ளார். நாயகன் படம், இந்தியில் தயாவான் என்று 1988ல் ரீமேக் செய்யப்பட்டது. அதில் வினோத் கன்னா, மாதுரி நடித்தனர். படத்தில் நடித்தபோது வினோத் கன்னா அத்துமீறியதாகவும், உதட்டை கடித்ததாகவும், இதில் ரத்தம் வந்து விட்டதாகவும், இக்காட்சியை நீக்காமல் இருக்க ரூ.1 கோடி தனக்கு தரப்பட்டதாகவும் மாதுரி தீட்சித் கூறியுள்ளார்.
AI என்று தெரியாமல் நிர்மலா சீதாராமன் என நம்பி ₹33 லட்சத்தை காங்., நிர்வாகி இழந்துள்ளார். குன்னூரை சேர்ந்த லாரன்ஸுக்கு FB-ல் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற ஒரு லிங்க் வந்துள்ளது. உள்ளே சென்றவர் லட்சங்களில் டிரேட் செய்துள்ளார். நல்ல லாபமும் கிடைத்துள்ளது. ஒருகட்டத்தில் ரசீது கேட்டதும் எதிரில் இருப்பவர் ஆஃப் ஆகவே, ஏமாந்ததை தெரிந்து போலீஸுக்கு சென்றுள்ளார். ஆன்லைன் வர்த்தகர்கள் ஜாக்கிரதை!
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்; அதை மீறினால் உடனே நடவடிக்கை பாயும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த சிம்பிள் டிப்ஸை ட்ரை பண்ணுங்க ➤சமீபத்திய சாஃப்ட்வேர் அப்டேட் செஞ்சிருக்கோமா என செக் பண்ணுங்க ➤நெட்வொர்க் ஸ்விட்ச்: போனில் செட்டிங்ஸ் -> மொபைல் நெட்வொர்க் -> SIM Management -> Switch data connection during calls’ஐ தேர்ந்தெடுக்கவும் ➤சிம் கார்டை எடுத்து கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் போனில் பொருத்தி முயற்சிக்கலாம் ➤Aeroplane Mode-ஐ ON/OFF செய்து பாருங்க. ➤ஒருமுறை Restart செய்து பார்க்கலாம்.
மும்பையில் WAVES உச்சிமாநாட்டில் பேசிய நடிகர் ரஜினி, ‘எந்த சவாலையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர் பிரதமர் மோடி’ என்று புகழாரம் சூடியுள்ளார். பிரதமர் ஒரு போராளி, அவரின் திறமையை ஒரு தசாப்தமாக நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம் எனக் கூறிய ரஜினி, பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் தக்க பதிலடி கொடுப்பார். காஷ்மீரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணி ஜூன் 4-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட தகுதி அடிப்படையில் ₹1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதற்காக, TN முழுவதும் 9,000 இடங்களில் முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
IPL-ல் கவனம் பெற்று வரும் ரோபோட்டிக் நாய்க்கு பெயர் வைத்த விவகாரத்தில் BCCI சிக்கலில் சிக்கியுள்ளது. ‘சம்பக்’ என்ற பெயரில் இதழ் ஒன்று வெளி வந்து கொண்டிருக்கும் போது அந்த பெயரை ரோபோ நாய்க்கு எப்படி வைக்கலாம் என கூறி தனியார் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தை நாடியது. வர்த்தக நோக்கத்தில் ‘சம்பக்’ என்ற பெயர் பயன்படுத்த முடியாது என கூறிய நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் BCCI பதில் அளிக்க உத்தரவிட்டது.
பஹல்காம் தாக்குதலை விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. விசாரணை அமைப்புகளுக்கு மன சோர்வை ஏற்படுத்தும் வகையில் மனு உள்ளதாக கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பொறுப்பற்ற பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றம் மனுதாரரை சாடியது. மேலும் ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள், பாதுகாப்பு தொடர்பான பிரச்னை இருந்தால் ஐகோர்ட்டை அணுகலாம் எனவும் உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.