News September 27, 2024
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் (109) உடல்நலக்குறைவால் காலமானார். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியைச் சேர்ந்த அவர், விவசாயத்திற்கு அளித்த பங்களிப்பை பாராட்டி 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவர், தான் விவசாயம் கற்ற வேளாண் பல்கலை. விவாதக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அண்மையில் திமுக முப்பெரும் விழாவில் அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.
Similar News
News November 3, 2025
ரயில் டிக்கெட் முன்பதிவில் வந்த அதிரடி மாற்றம்.. கவனியுங்க!

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில், ✱முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள் & மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, Lower birth வழங்கப்படும் ✱இரவு 10- காலை 6 மணி வரை மட்டுமே பயணம் செய்பவர்களுக்கு Sleeping accommodation கிடைக்கும் ✱Side upper berth முன்பதிவு செய்தவர்களுக்கு, இரவு 10- காலை 6.00 மணி வரை, Side lower berth சீட்டில் அமர உரிமை இல்லை.
News November 3, 2025
அதிகார பகிர்வு கேட்பது காலத்தின் தேவை: KS.அழகிரி

கூடுதல் தொகுதி கேட்டாலே கூட்டணிக்கு சிரமம் வந்துவிடுமா? அப்படியென்றால், நாங்கள் எதுவுமே கேட்கக் கூடாதா என KS.அழகிரி வினவியுள்ளார். அதிகாரப் பகிர்வை கேட்பது காலத்தின் தேவையாக கருதுவதாக கூறிய அவர், கூட்டணி கட்சிக்கு எதுவும் கிடைக்காதென்றால் இதற்குப் பெயர் கூட்டணியே கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணியால் ஒருதரப்பு மட்டுமே வலிமை அடைந்துகொண்டே போவது சரியில்லை எனவும் கூறியிருக்கிறார்.
News November 3, 2025
SIR விவகாரத்தில் EPS-க்கும் சந்தேகம்: CM ஸ்டாலின்

SIR என்ற பெயரில் சதிச்செயலில் ஈடுபட EC முயல்வதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். SIR விவகாரத்தில் EPS-க்கும் சந்தேகம் இருப்பதாகவும், ஆனால் அதை எதிர்க்காமல் ’பாஜகவின் பாதம் தாங்கி’ என்பதை அவர் நொடிக்கு ஒருமுறை நிரூபிப்பதாகவும் சாடியிருக்கிறார் மேலும், பாஜகவால் தமிழகத்தில் ஒன்றும் செய்யமுடியாது என்ற அவர், 2026-ல் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தது என ஹெட்லைன்ஸ் வரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.


