News October 22, 2025
நெல் கொள்முதல்: EPSக்கு அமைச்சர் பதிலடி

EPS ஆட்சியில் தினசரி 700 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 1,000 மூட்டைகளாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, நெல் மணிகள் நாற்று நடும் அளவிற்கு வளர்ந்த சம்பவங்கள் உண்டு என்றும் <<18072011>>EPS<<>>-க்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, நெல் கொள்முதலை அரசு தாமதிப்பதாக EPS விமர்சித்திருந்தார்.
Similar News
News March 27, 2026
பாலியல் புகார்… அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது!

பாலியல் புகாரில் அண்ணா பல்கலை., பேராசிரியர் ஞானவேல் பாபு நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார். <<19489815>>மாணவி அளித்த புகாரின் பேரில் <<>>அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவர்களின் போராட்டம் காரணமாக அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது கைதாகியுள்ளார். கடந்த 2024-ல் அண்ணா பல்கலையில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து நடந்துள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 27, 2026
டிடிவி மீது அமமுக மாவட்டச் செயலாளார் அதிருப்தி

அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் MLA-வுமான பார்த்திபன், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சோளிங்கர் தொகுதியில் அமமுக வேட்பாளராக பார்த்திபனை டிடிவி அறிவித்திருந்தார். ஆனால், தற்போது அந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிருப்தியடைந்த அவர், அமமுகவில் தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து, தனது ஆதரவாளர்கள் 2000-க்கும் மேற்பட்டோருடன் ஆலோசித்து வருகிறார்.
News March 27, 2026
இனி டாலரில் டிரம்ப் கையெழுத்து

அமெரிக்க டாலரில் இனி டிரம்பின் கையெழுத்தும் இடம்பெறும் என அந்நாட்டு அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது. US-ன் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 165 ஆண்டுகளாக கருவூல செயலாளர், பொருளாளரின் கையெழுத்து மட்டுமே இடம்பெற்று வந்த நிலையில் முதல் முறையாக பதவியில் உள்ள அதிபரின் கையெழுத்து இடம்பெறுகிறது. முதற்கட்டமாக $100 கரன்சியில் டிரம்பின் கையெழுத்து இடம்பெறுகிறது.


