News August 18, 2024
PAC தலைவராக கே.சி. வேணுகோபால் அறிவிப்பு

நாடாளுமன்ற பொது கணக்குக் குழுத் (PAC) தலைவராக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபாலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். ரயில்வே, பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற அமைச்சகங்களால் மேற்கொள்ளப்படும் செலவினங்கள், சிஏஜி அறிக்கைகளை PAC ஆய்வு செய்யும். PAC தலைவர் பதவி, மக்களவை எதிர்க்கட்சிக்கு அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி காங்கிரஸ் எம்பி வேணுகோபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
பிரபலம் காலமானார்.. CM ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

<<18358061>>கவிஞர் ஈரோடு தமிழன்பன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர் என்றும் தனது கலைப்பணிக்காக எண்ணற்ற விருதுகளை குவித்தவர் எனவும் தமிழன்பனுக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இறுதிக்காலம் வரை தமிழுக்கு தொண்டாற்றியவர் என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
பொய் கதைகளில் இருந்து தப்புவது கடினம்: ஜக்தீப் தன்கர்

துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, ஜக்தீப் தன்கர் பொதுவெளிக்கு வருவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். தற்போது 4 மாதங்களுக்கு பிறகு, முதல்முறையாக போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது, பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினமானது என்று தெரிவித்தார். முன்னதாக, பாஜக அவரை வீட்டுச்சிறையில் வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின..
News November 22, 2025
ஷூட்டிங்கில் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு எலும்பு முறிவு

ஈத்தா பட ஷூட்டிங்கின்போது, பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நாஷிக்கில் நடைபெற்றுவந்த ஷூட்டிங்கின்போது அவருக்கும் காயம் ஏற்பட்டதை அடுத்து, ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காயம் குணமடைந்த பிறகே மீண்டும் ஷூட்டிங்கை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்.


