News April 17, 2024
வெளியூர் ஆட்கள் இன்று மாலை வெளியேற உத்தரவு

தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அப்போது முதல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இதனால், பிரசார நேரம் நிறைவடைந்ததும் தொகுதி சாராத ஆட்கள் வெளியேற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வெளிநபர்கள் தங்கவில்லை என்பதை விடுதி நிர்வாகிகள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
இந்தியா வரும் ரொனால்டோ? ரசிகர்களுக்கு HAPPY NEWS!

கால்பந்து GOAT ரொனால்டோ இந்தியாவில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘AFC சாம்பியன்ஸ் லீக் 2’ போட்டியில் ரொனால்டோ விளையாடும் சவுதி கிளப்பான அல்-நாசர், இந்தியாவின் கோவா FC இரண்டும் ஒரே பிரிவில் (Group D) இடம்பெற்றுள்ளன. எப்படியும் இரண்டு அணிகளுக்கு இடையே ஒரு ஆட்டமாவது இந்தியாவில் நடைபெறும். அந்த போட்டிக்கு ரொனால்டோ ஆப்சென்ட் ஆகாமல் இருந்தால், ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம்!
News August 15, 2025
இல. கணேசன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

நாகாலாந்து கவர்னர் <<17417276>>இல. கணேசன்(80)<<>> மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாஜகவில் மாநிலத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவருக்கு, 2021-ல் கவர்னர் பதவி வழங்கி மத்திய அரசு சிறப்பித்திருந்தது. அவரது மறைவுக்கு இபிஎஸ், தமிழிசை, அண்ணாமலை, எல்.முருகன், செல்வப்பெருந்தகை, TR பாலு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News August 15, 2025
ALERT: இவற்றால் உங்களுக்கு கிட்னி ஸ்டோன் வரலாம்

கீழ்க்கண்ட காரணங்களால் சிறுநீரக கற்கள் ஏற்படலாம்: *போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது *அதிக உடல்பருமன் *சிறுநீர்ப்பாதை தொற்று, நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு இருத்தல் *புரதம், சோடியம் மற்றும் ஆக்சலேட் நிறைந்த உணவுகள் *அதிக வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த இடங்களில் வசிப்பது *சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தாலும், அதைத் தள்ளிப் போடுவது *சில வகை மருந்துகள். இவற்றை தவிர்த்தாலே கற்களை தடுக்கலாம்.