News October 16, 2024
ஆவடி ரயில் நிலையத்தில் வெளியூர் பயணிகள் தவிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள பேசின்பிரிட்ஜ் தண்டவாளம் மீது மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த வழியே சென்ட்ரல் செல்லும் ரயில்கள், சென்ட்ரலில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் ஆவடிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் ஆவடியில் ரயில்களுக்காக குவிந்துள்ளனர். இதனால் வழக்கத்தை விட ஆவடி ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
Similar News
News August 15, 2025
பாக்., இந்தியாவிடம் மோசமாக தோற்கும்: EX பாக் வீரர்

லெஜண்ட்ஸ் லீக் போன்று ஆசிய கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என முன்னாள் பாக்., வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தியா விளையாடினால் பாக்., மோசமாக தோற்கும் என்றும், AFG-யிடம் தோற்றால் கூட ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் இந்தியாவிடம் தோற்றால் பைத்தியம் பிடித்தது போல ரியாக்ட் பண்ணுவார்கள் என கூறினார். சமீப காலமாக பாக் அணி மோசமான பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 15, 2025
ஆகஸ்ட் 15: வரலாற்றில் இன்று

* 1947 – இந்தியா சுதந்திரமடைந்த நாள். இன்று 78-வது சுதந்திர தினம்.
* 1872 – இந்தியத் தேசியவாதியும், ஆன்மிகத் தலைவருமான அரவிந்தர் பிறந்த தினம்.
* 1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
* 1948 – கொரியக் குடியரசு உருவானது.
* 1964 – நடிகர் அர்ஜுன் பிறந்தநாள்.
News August 15, 2025
CM ஸ்டாலின் அறிவிப்புகளுக்கு வரவேற்பு: திருமாவளவன்

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை வரவேற்பதாகவும், அதே சமயம் தூய்மைப் பணிகளை தனியார் மையம் ஆக்கப்படுவதை அரசு கைவிட வேண்டுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கையின் போது தூய்மை பணியாளர்கள் தாக்கப்பட்டதாக வரும் தகவல் கவலைப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக பதிவான வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.