News September 20, 2025
ஓஷோ பொன்மொழிகள்

*பயம் முடிகிற இடத்தில் வாழ்க்கைத் தொடங்குகிறது. *யாரோ ஒருவராகும் எண்ணத்தைக் கைவிடுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. உங்களிடம் மேம்படுத்த எதுவுமில்லை. விஷயம் என்னவெனில் இதை நீங்கள் உணர்ந்து, புரிந்து, ஏற்பது மட்டுமே. *காதலில் விழுவதன் மூலம் நீங்கள் குழந்தையாகவே இருக்கிறீர்கள். *உண்மை என்பது வெளியில் கண்டுபிடிக்கப்பட வேண்டியதில்லை. உள்ளூர உணரப்பட வேண்டியது.
Similar News
News September 20, 2025
தமிழகம் தலைகுனிந்து நிற்க DMK தான் காரணம்: EPS

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று EPS பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசு ஹாஸ்பிடல்களின் நிலையை சுட்டிக்காட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனைகளை பார்ப்பதைவிட மாரத்தான் ஓடுவதில் தான் குறியாக இருப்பதாக விமர்சித்தார். மேலும், இப்போது திடீரென தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என CM சொல்வதாகவும், ஆனால், 2ஜி ஊழலால் ஏற்கனவே தமிழகம் தலைகுனிந்துதான் இருப்பதாகவும் சாடியுள்ளார்.
News September 20, 2025
ரேபிஸ் தடுப்பூசி போட்டும் உயிரிழப்பது ஏன்?

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், ரேபிஸ் தடுப்பூசி போட்டும், உயிரிழந்தது குறித்து பொது சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது. தமிழகத்தில் இந்தாண்டில் 3.80 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தடுப்பூசி வேலை செய்யவில்லை என கூற முடியாது எனவும், உயிரிழந்தவர்கள் முறையான சிகிச்சை பெற்றனரா என்பது ஆய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
News September 20, 2025
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக டெல்லியில் போராட்டம்: திருமா

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமா, மத்திய அரசு நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தில் நடப்பதை பற்றி யாரும் வாய் திறக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், டெல்லியில் போராட்டம் நடத்தி அங்குள்ளவர்களை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வைப்போம் எனத் தெரிவித்தார்.