News March 25, 2025
இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்ட ஆஸ்கர் வென்ற இயக்குநர்!

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஹம்தான் பல்லால், இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்டு கைதாகி இருக்கிறார். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனின் ‘வெஸ்ட் பேங்க்’ பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஹம்தான் தற்போது எங்கு இருக்கிறார் என்ற தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் கொடூரங்களை மையமாக கொண்ட ‘No Other Land’ படத்தை ஹம்தான் இயக்கினார்.
Similar News
News March 28, 2025
எல்பிஜி லாரி வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தை தோல்வி

தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பழைய முறையில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 28, 2025
செவ்வாய் தோஷம் நீங்க…

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுகிறது என கவலையில் மனம் வாடுவோர் செவ்வாய்க்கிழமையில் வரும் சதுர்த்தி திதி நாளில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை சாற்றி, 32 தீபங்களை ஏற்றி, முக்குறுணி மோதகம் படைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். குறிப்பாக இந்த வழிபாடு செய்த கையோடு 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் செவ்வாய் தோஷம் விலகும் என ஐதீகம்.
News March 28, 2025
பிளே ஆப் செல்லும் அணிகள் எவை? இர்பான் கணிப்பு

ஐ.பி.எல்.2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இதற்கான விடை நமக்கு கிடைத்துவிடும்.