News June 26, 2024
ரவி வர்மனுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் அகாடமி

ஆஸ்கர் அகாடமியின் Motion picture of Arts and sciences குழுவில் உறுப்பினராக சேர ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 57 நாடுகள் உள்ள 487 திரைத்துறை பிரபலங்களுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பிதழ் அனுப்பி கௌரவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இயக்குநர் ராஜமௌலி, ஆடை வடிமைப்பாளர் ரமா, நடிகை ஷபனா ஆஸ்மி உள்ளிட்ட இந்திய திரையுலக நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
Similar News
News December 1, 2025
கடலூர்: தொடர் மழையால் நிரம்பிய 31 ஏரிகள்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயலின் காரணமாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 228 ஏரிகள் உள்ள நிலையில், மழையின் காரணமாக 31 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும் 50 ஏரிகளில் 76 – 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
News December 1, 2025
செயலில் காட்டுங்க PM மோடி: செல்வப்பெருந்தகை

தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி திட்டங்கள் மூலம் PM மோடி காட்டவேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மத்திய அரசு சமஸ்கிருதத்துக்காக ₹2532 கோடி செலவிட்டதாகவும், ஆனால் தமிழ் உள்பட 5 மொழிகளுக்கு ₹147.56 கோடி மட்டுமே செலவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், PM தமிழை உயர்த்தி பேசியதில் பெருமை தான் என்ற அவர், ஆனால் செயலில் TN-ஐ புறக்கணிப்பதாக விமர்சித்துள்ளார்.
News December 1, 2025
உலகின் தலையெழுத்து மாறிய தினம் இன்று!

2019, டிசம்பர் 1-ம் தேதி, உலக தலையெழுத்து மாறிய தினம். சீனாவின் ஊகானில் உலகின் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. வேகமாக பரவிய பாதிப்பால், உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன, பல குடும்பங்கள் பிரிந்தன, வீதிகள் வெறிச்சோடின, கோடிக்கணக்கான உயிர்கள் மறைந்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கொரோனா காயம் மனித மனங்களில் நீங்காத ரணமாக இருக்கும். உங்க வாழ்க்கையை கொரோனா எப்படி பாதித்தது?


