News March 18, 2024

6 மாநில உள்துறை செயலர்களை மாற்ற உத்தரவு

image

6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத், உ.பி., பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல், உத்தராகண்ட் மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு வங்க டிஜிபியை மாற்றவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 27, 2025

செந்தில் பாலாஜி இலாகாக்கள், இனி இவர்கள் வசம்?

image

கோவையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிகளே அமைச்சராக <<16230061>>செந்தில் பாலாஜி <<>>பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அவர் வசமுள்ள மின்சாரத்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை இலாகா முத்துசாமிக்கும் கூடுதலாக அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News April 27, 2025

தோனிக்குப் பதில் இனி இவரா? CSK முக்கிய முடிவு

image

ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவை (19) CSK பயிற்சி முகாமுக்கு அழைத்துள்ளது. இவரது செயலைப் பார்த்துவிட்டு, அவருக்கு வாய்ப்பு வழங்க CSK நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மோசமான தோல்வியைச் சந்தித்து வரும் CSK அணியில் தோனிக்குப் பிறகு விக்கெட் கீப்பர் யாரும் இல்லை என ரெய்னா கூறியிருந்தார். அதேநேரம், அடுத்த சீசனில் ஒருவேளை தோனி ஆடவில்லையென்றால் என்ற கேள்விக்கு விடை இதுவோ?

News April 27, 2025

வருமான உச்ச வரம்பு உயர்வு: TN அரசு அறிவிப்பு

image

கடந்த ஏப்.17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளின்படி, தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்கி TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதோடு, புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க வருமான உச்ச வரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ₹5 லட்சமாக உள்ள குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.

error: Content is protected !!