News April 18, 2024

நயினார் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

ரயிலில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரைத் தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அத்தொகுதி சுயேச்சை வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில், நயினார் நாகேந்திரன் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

நெல்லையில் 6 இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

image

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம், ஐ என் எஸ் கட்டபொம்மன், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஆறு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தியுள்ளார். நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரவு ரோந்து பணியில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

News November 11, 2025

Bussiness Roundup: வீடு விற்பனை மதிப்பு ₹6.65 லட்சம் கோடி

image

*வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. *கிரெடிட் கார்டு கடன் தொகை ₹2.17 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *இந்தியாவில் நடப்பாண்டில் வீடு விற்பனை மதிப்பு ₹6.65 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்ப்பு. *அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைந்து ₹88.71 ஆனது. *ஒடிஷா, ம.பி., ஆந்திராவில் தங்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு.

News November 11, 2025

3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!