News May 21, 2024
அனுமதியின்றி அணை கட்டுவதை நிறுத்த உத்தரவு

இடுக்கி மாவட்டம் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கேரள அரசு கட்டுகிறது. கடந்த மூன்று நாள்களாக இந்த விவகாரம் தமிழ்நாட்டில் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேரள அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அனுமதி பெறவில்லை என்றால், அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
கொள்கை தலைவரை மறந்தாரா விஜய்?

தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதேநாளில், அஞ்சலை அம்மாளின் தியாகத்தைப் போற்றி வணங்குவதாக அவரது உருவப்படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போட்டோ வெளியானது. ஆனால், இன்று விஜய்யிடம் இருந்து இதுவரை எந்த பதிவும் வரவில்லை. இதனால் கொள்கை தலைவரையே விஜய் மறந்துவிட்டாரா என அரசியல் விமர்சகர்கள் கேட்கின்றனர்.
News February 20, 2026
BREAKING: திமுகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு கொடுத்தார்

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று திமுக கூட்டணிக்கு ஆதரவாக OPS பேசியுள்ளது அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. CM ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்தபின் OPS செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் 5 ஆண்டுகால சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றன. தற்போதைய அரசியல் சூழல், ஸ்டாலினின் சிறப்பான 5 ஆண்டுகால ஆட்சி காரணமாக திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
துரைமுருகன் இடத்தில் அன்பில் மகேஸ்.. என்ன ஆச்சு?

சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று அவை முன்னவர் துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஸ் அமர்ந்திருந்தார். உடல் நலக்குறைவால் இன்றைய கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்காத நிலையில், காலியாக இருந்த அவ்விருக்கையில் அன்பில் அமரவைக்கப்பட்டார். ஆனால், சீனியர்கள் பலர் இருக்கும் போது, அவை முன்னவர் அமர்ந்த இருக்கையில் ஜூனியர் அமைச்சர் ஒருவரை உட்காரவைத்தது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.


