News September 26, 2024
அரசு கலைக் கல்லூரிகளில் ஓய்வறை அமைக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள Arts காலேஜில் மாணவிகள் ஓய்வெடுக்க, தனி அறை அமைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓய்வறை கட்டுவதற்காக ₹8.55 கோடியை 3 வாரங்களில் ஒதுக்கவும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. முன்னதாக, அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள சானிடரி நாப்கின் எந்திரங்கள் பராமரிப்பின்றி இருப்பதாக வெளியான செய்தி அடிப்படையில், ஐகோர்ட் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.
Similar News
News August 12, 2025
ஒடிசாவில் தேர்தல் முறைகேடு: பிஜு ஜனதா தளம் புகார்

ஒடிசாவில் நடத்த லோக்சபா, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக BJD தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் ECI கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ள BJD, கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News August 12, 2025
புதிய பாதையில் இந்திய கிரிக்கெட் அணி!

நடுத்தரவர்க்க, மாநகரவாசிகளின் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, இன்று அனைத்து தரப்புக்குமானதாக மாறிவருகிறது. சமீபத்திய தொடரில், ஒவ்வொரு டெஸ்ட்டிலும் குறைந்தது 8 வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். லார்ட்ஸில் அதிகபட்சமாக 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் களமிறங்கினர். கில்(Sikh) வழிநடத்தும் அணியின் வேகப்பந்து வீச்சுப் படைக்கு பும்ரா(Sikh), சிராஜ்(Muslim) தலைமை ஏற்றுள்ளனர்.
News August 12, 2025
பிரியங்கா காந்தியை காணவில்லை.. பரபரப்பு புகார்

வயநாடு காவல்துறையில் MP பிரியங்கா காந்தியை காணவில்லை என பாஜக நிர்வாகி முகுந்தன் பல்லியரா மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தியை 3 மாதங்களாக காணவில்லை எனவும், சூரல்மலையில் ஏற்பட்ட பாதிப்பின் போது மக்களோடு இருக்கவில்லை எனவும் புகாரளித்துள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கடந்த 2 மாதங்களாக தொகுதியில் காணவில்லை என திருச்சூர் போலீஸிடம் மாணவர் காங்கிரஸ் புகாரளித்திருந்தது.