News May 10, 2024

20 லட்சம் மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்க உத்தரவு

image

20 லட்சம் மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்க தொலைத் தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு 28,200 செல்ஃபோன்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக காவல்துறை அளித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு, DoT ஆய்வு செய்தது. அதில் அந்த செல்ஃபோன்களில் 20 லட்சம் எண்கள் பயன்படுத்தப்பட்டது தெரிந்ததால், செல்போன்களை முடக்கவும், அந்த எண்களை மீண்டும் சரிபார்க்கவும் DoT உத்தரவிட்டது.

Similar News

News September 22, 2025

குழந்தை பெற்றுக் கொண்டால் ₹3 லட்சம் பரிசுத்தொகை

image

குழந்தையை பெற்றுக்கொண்டால் கூடுதல் சுமை என யோசிக்கும் பலர் உலகில் இருக்கதான் செய்கிறார்கள். ஆனால், தைவான் மக்கள் அப்படி யோசிக்க மாட்டார்கள். ஏனென்றால் அங்கு ஒரு குழந்தை பெற்றால் ₹3 லட்சம், இரட்டை குழந்தை பிறந்தால் ₹6 லட்சமும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தைவான் மக்கள் தொகையை அதிகரிக்க இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

News September 22, 2025

குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு ஏன் கொடுக்க கூடாது?

image

குழந்தைகளுக்கு முதல் ஒரு வயதில் சர்க்கரை, உப்பு கொடுத்ததால் அவர்களுக்கு அது பெரும் பாதிப்பை உடலில் ஏற்படுமாம். குழந்தைகளுக்கு சிறுநீரகங்கள் முதல் 12 மாதங்களில் முழுமையான வளர்ச்சியை அடையாது என்பதால், உப்பு(சோடியம்) பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், சர்க்கரை கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வை கொடுக்கும். இதனால் சத்தான உணவுகளை உட்கொள்ள மாட்டார்கள். தாய்மார்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 22, 2025

விஜய் மீதான நம்பகத்தன்மை குறையும்: துரை வைகோ

image

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜய் விமர்சித்தது ஏற்புடையதல்ல என துரை வைகோ தெரிவித்துள்ளார். பொத்தாம் பொதுவாக அனைவர் மீதும் குற்றச்சாட்டு வைப்பது சரி அல்ல என கூறிய அவர், அது விஜய் மீதான நம்பகத்தன்மையை மக்களிடம் குறைக்கும் எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து விரிவான அறிக்கையை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!