News November 24, 2024
திமுகவினருக்கு உதயநிதி போட்ட ஆர்டர்..!

திமுகவினருக்கு உதயநிதி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். திருச்சியில் நடந்த கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. வெற்றி என்பது தெரிந்ததுதான். ஆனால், எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறோம் என்பதுதான் விஷயம். 200 தொகுதிகளை நாம் கைப்பற்றியே ஆக வேண்டும். அதில் எந்த சமரசமும் இல்லை. எனவே தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள் என உத்தரவிட்டார்.
Similar News
News December 20, 2025
நாமக்கல் தொழிலாளர்கள் உதவி ஆணையம் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உறுப்பினர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி, வரும் 30.12.2025-ஆம் தேதிக்குள் தங்களது புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து ஸ்மார்ட் கார்டினை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
தனியார் பள்ளிகளில் வரும் மாற்றம்.. அரசு புதிய அறிவிப்பு

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கி மூலம் பாடல்களை ஒலிப்பரப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால் திங்கள் முதல் இது நடைமுறைக்கு வரும் என வாய்ப்புள்ளது.
News December 20, 2025
இந்தியாவை ரிஷிகள்தான் உருவாக்கினார்கள்: RN ரவி

வடமாநிலங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி தென் மாநிலத்தவர்கள் குறைவாக தெரிந்துவைத்துள்ளனர் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். ‘தமிழ் கற்கலாம்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழை கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்திய அவர், மொழியால் மக்களுக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவை அரசர்கள் உருவாக்கவில்லை எனவும் ரிஷிகள்தான் உருவாக்கினார்கள் என்றும் பேசியுள்ளார்.


