News January 10, 2025
சிறுமியின் குடும்பத்திற்கு ₹5 லட்சம் வழங்க ஆணை

விக்கிரவாண்டியில், கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், முதல்வர் ₹5 லட்சம் வழங்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கில் சிறையில் உள்ள பள்ளி தாளாளர், முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ₹3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 8, 2025
ஃபிரிட்ஜில் இதையெல்லாம் வைக்குறீங்களா? பேராபத்து!

நறுக்கிய காய்கறி மற்றும் பழங்களை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜின் கூலிங்கான நிலை, கிருமிகள் பரவவும், அவை வெகு நேரம் உயிர்வாழ்வதற்கான உகந்த சூழலையும் அளிக்கிறது. எனவே நறுக்கி வைத்திருக்கும் பழங்களில் நிச்சயமாக கிருமிகள் பரவியிருக்கும். இதை நீங்கள் சாப்பிட்டால், தொற்று ஏற்பட்டு, ஃபீவர், ஃபுட் பாய்சன் கூட ஆகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE IT.
News December 8, 2025
கோவா தீ விபத்து: 4 பேர் கைது, 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

<<18492944>>கோவா தீ விபத்து<<>> தொடர்பாக, விடுதி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், தீ பாதுகாப்பு விதிகளை இரவு விடுதி பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாதுகாப்பு விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் அனுமதி அளித்த 3 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்த முழு அறிக்கையை விசாரணைக்குழு ஒருவாரத்தில் சமர்ப்பிக்கும் என CM பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
கடன் வாங்கியவர்களுக்கு GOOD NEWS

RBI ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்ததை தொடர்ந்து, பல வங்கிகள் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. அதன்படி, PNB 8.35%-ல் இருந்து 8.10%ஆகவும், Bank of Baroda 8.15%-ல் இருந்து 7.90% ஆகவும், Bank of India (BOI) 8.35%-ல் இருந்து 8.10%-ஆகவும் குறைத்துள்ளன. இதனால், வீடு, கார், தனிநபர் கடனுக்கான வட்டி வெகுவாக குறைந்துள்ளது. இது கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


