News August 2, 2024
மலை மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க ஆணை

வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நீலகிரி, திண்டுக்கல் உள்பட 8 மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், மழை நாள்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அவசர தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், மழை நேரத்தில் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை துறை இணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
அர்னால்டை பின்னுக்கு தள்ளிய ஷாருக் கான்

2025 ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் ஷாருக்கான ₹12,490 கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அர்னால்ட், டாம் குரூஸ் ஆகியோரையெல்லாம் பின்னுக்கு தள்ளி, கிங் கான், பாலிவுட்டில் இருந்து உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான் எந்த இடத்தில் இருக்கிறார் தெரியுமா? மேலே உள்ள போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
ஆவின் விவகாரத்தில் திமுக நாடகம்: அன்புமணி

தமிழக அரசுத்துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலையை 5-வது முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜிஎஸ்டி வரிகுறைப்பை நடை முறைப்படுத்த தவறிய திமுக மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுபடுத்த தள்ளுபடி நாடகத்தை அரங்கேற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி நடத்த வேண்டிய திமுக, அதற்கு எதிராக நாடகம் நடத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் சாடியுள்ளார்.
News December 3, 2025
நள்ளிரவு 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பொழியும்

நள்ளிரவு 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர், விருதுநகரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?


