News August 2, 2024
மலை மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க ஆணை

வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நீலகிரி, திண்டுக்கல் உள்பட 8 மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், மழை நாள்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அவசர தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், மழை நேரத்தில் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை துறை இணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
இந்திய கிரிக்கெட் அணியும்.. ஜெர்சி ஸ்பான்சர்களும்!

*SAHARA: திவாலானதை தொடர்ந்து, 2012-ல் ஸ்பான்சர்ஷிப் நிறுத்தப்பட்டது.
*ஸ்டார்: நிதி அழுத்தத்தின் காரணமாக, உரிமத்தை இழந்து வெளியேறியது.
*OPPO: இந்தியா- சீனா அரசுகளுக்கிடையேயான பதட்டமான சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டது.
*Byjus: நிதி இழப்புகளின் காரணமாக, ஸ்பான்சர்ஷிப் நிறுத்தப்பட்டது.
*Dream11: ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் & ஒழுங்குபடுத்துதல் மசோதா 2025, தடை செய்யப்பட்டுள்ளது.
News August 24, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪கனிமொழிக்கு <<17502789>>பெரியார் <<>>விருது.. திமுக அறிவிப்பு
✪தமிழுக்கு நிதி <<17502734>>ஒதுக்க <<>>மனமில்லை.. ஆ.ராசா விமர்சனம்
✪10% <<17500685>>வாக்குறுதிகளை <<>>கூட திமுக நிறைவேற்றவில்லை.. EPS
✪<<17502649>>கிரிக்கெட்டில் <<>>இருந்து ஓய்வு பெற்றார் புஜாரா
✪விஜய், <<17500901>>அஜித் <<>>போலதான் SK.. முருகதாஸ் புகழாரம்.
News August 24, 2025
BREAKING:கனிமொழிக்கு புதிய அங்கீகாரம்.. திமுக அறிவிப்பு

செப்.17-ல் கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திமுக துணை பொதுச் செயலாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான MP கனிமொழிக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா விருது – சுப.சீத்தாராமன், கலைஞர் விருது – சோ.மா.இராமச்சந்திரன், பாவேந்தர் விருது – குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது – மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது – பொங்கலூர் நா.பழனிச்சாமி.