News March 20, 2024
ரேஷன் கார்டு வழங்க உத்தரவு

இ-ஷ்ரம் தளத்தில் பெயர் பதிவு செய்துள்ள 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்படாததால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 மாதங்களுக்குள் கார்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை உடனே வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 27, 2025
இராமநாதபுரம், பரமக்குடி MLA வேட்பாளர்கள் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடியில் மருத்துவர் எழில் இளவரசி, இராமநாதபுரத்தில் முத்து கேசவன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டார்.
News November 27, 2025
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் சிவகாசி மாநகர தொழிலாளர் பிரிவு அமைப்பாளர் L.நாகராஜன், KT ராஜேந்திர பாலாஜி முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், பட்டாசு தொழிலதிபர் சந்தனபாண்டியன் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்தனர். 2021 தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருந்தது.
News November 27, 2025
₹1.17 கோடியில் காருக்கு பேன்ஸி நம்பர்!

காருக்கு பேன்ஸி நம்பர் வாங்க ஒருவர் ₹1.17 கோடி செலவு செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். இது ஹரியானாவில் நடந்துள்ளது. HR88B8888 என்ற பேன்ஸி நம்பரை பெறுவதற்கு அடிப்படை ஏலத் தொகையாக ₹50,000 நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு கடுமையான போட்டி நிலவ, இறுதியாக ஒருவர் ₹1.17 கோடிக்கு ஏலம் கேட்டுள்ளார். இந்த பணத்தில் 4-5 கார்கள் வாங்கலாமே என நெட்டிசன்கள் கூறுகின்றனர். நீங்க பேன்ஸி நம்பர் வாங்கி இருக்கீங்களா?


