News March 20, 2024

ரேஷன் கார்டு வழங்க உத்தரவு

image

இ-ஷ்ரம் தளத்தில் பெயர் பதிவு செய்துள்ள 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்படாததால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 மாதங்களுக்குள் கார்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை உடனே வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 2, 2025

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

image

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று இரவு சென்னை – பாண்டிச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

News December 2, 2025

தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

image

சில்லென்ற காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் இன்று. நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? COMMENT IT.

News December 2, 2025

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சமீபமாக பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டெல்லி ஏர்போர்ட்டிற்கு வந்த இமெயிலில், விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக கூறப்பட்டது. உடனடியாக விமானம் மும்பை ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இது போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது.

error: Content is protected !!