News March 20, 2024
ரேஷன் கார்டு வழங்க உத்தரவு

இ-ஷ்ரம் தளத்தில் பெயர் பதிவு செய்துள்ள 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்படாததால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 மாதங்களுக்குள் கார்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை உடனே வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 5, 2025
பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் டிச.10- டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பிற்பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பிற்பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பிற்பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.
News December 5, 2025
பொடுகு பிரச்னையில் இருந்து மொத்தமாக விடுபட..

ஆரோக்கியமான கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பொடுகு பிரச்னைக்கு ஆப்பிள் சைடர் வினிகர் தீர்வளிக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு நீர் சேர்த்துக்கொள்ளுங்கள். தலைக்கு குளித்த பின், வினிகரை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு முடியை குளிர்ந்த நீரில் அலசி வந்தால் பொடுகு, அதனால் ஏற்படும் முடி உதிர்வு குறையும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.
News December 5, 2025
BREAKING: விமான டிக்கெட் விலை விறுவிறுவென உயர்ந்தது

இண்டிகோ ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை – பெங்களூரு ₹3,129 என இருந்த டிக்கெட் விலை ₹20,599, ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை – திருச்சி ₹3,129 to ₹14,961, சென்னை – திருவனந்தபுரம் ₹6,805 to ₹34,403, சென்னை – மும்பை ₹5,980 to ₹42,448, சென்னை – டெல்லி ₹7,746 to ₹32,782 வரை உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


