News May 16, 2024

அரசுப் பேருந்துகளை கவனமாக இயக்க உத்தரவு

image

கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Similar News

News December 13, 2025

BREAKING: மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. அதனால், கவனமாக இருங்கள் நண்பர்களே!

News December 13, 2025

நடிச்சா கண்டிப்பா சொல்றேன்.. சந்தானம்!

image

நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ‘ஜெயிலர் 2′ படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால், அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. சந்தானமும் அமைதியாகவே இருக்கிறார். இந்த நிலையில்தான், அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய, படம் தானே, சொல்லிட்டுதான் செய்வேன்’ என பதிலளித்தார்.

News December 13, 2025

ஒரிஜினல் மிளகு Vs பப்பாளி விதை: எப்படி கண்டுபிடிப்பது?

image

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த பொருள் மிளகு. இதில், பப்பாளி விதைகளை சேர்த்து கலப்படம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரிஜினல் மிளகை கண்டுபிடிப்பது எப்படி? *ஒரு கிளாஸ் தண்ணீரில் மிளகை போட்டால், கலப்படமில்லாத மிளகு தண்ணீரில் மூழ்கிவிடும், பப்பாளி விதைகள் எனில் அவை மிதக்கும் *பப்பாளி விதையில் ஒருவித கசப்பு வாசனை வரும், ஆனால் மிளகுக்கு தனித்துவமான கார வாசனை உண்டு.

error: Content is protected !!