News May 16, 2024
அரசுப் பேருந்துகளை கவனமாக இயக்க உத்தரவு

கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News January 6, 2026
இந்த மாத்திரை அதிகம் எடுக்குறீங்களா?கேன்சர் வரும்!

தொட்டதுக்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிடுற ஆளா நீங்க? ஆன்டிபயாடிக்கை அதிகமாக எடுத்தால் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். இதனால், குடல் ஆரோக்கியம் சீர்குலையும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும், நாளடைவில் கேன்சர் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளுங்கள். பலரை கேன்சரில் இருந்து காக்கும், SHARE THIS.
News January 6, 2026
திமுக அரசிடம் காசு கேட்கும் அண்ணாமலை

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு அதனை பராமரிக்க மாதந்தோறும் ₹1,000 வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், தானும் ஜல்லிக்கட்டுக்கு காளையை அனுப்பியுள்ளதால், இந்த வாக்குறுதியின்படி தனக்கு ₹48,000 வழங்க வேண்டும் என அண்ணாமலை அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் எல்லோரும் எப்போது இந்த உதவித்தொகையை வழங்குவார்கள் என காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 6, 2026
இன்னும் 5 நாள்களில் களத்தில் Ro-Ko!

வரும் 11-ம் தேதி முதல் நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட ODI தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட T20I தொடரிலும் விளையாடவுள்ளது. ஆண்டின் தொடக்கமே Ro-Ko களமிறங்கவுள்ளனர் என்பதால், ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இத்தொடருக்கான சிறப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொடரில் ரோஹித், கோலி இருவரில் யார் அதிக ரன்களை அடிப்பார்கள் என நினைக்கிறீங்க?


