News July 3, 2024
4 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில், வன்முறை தொடர்பான விசாரணையை 4 மாதத்திற்குள் முடிக்க விசாரணை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும், 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
Similar News
News September 22, 2025
தவறான யூடியூபர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் : வடிவேலு

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வடிவேலு, இன்றைய சினிமா கலைஞர்களின் நிலை குறித்து பேசியுள்ளார். திரைத்துறையினரிடம் கொஞ்சம் ஒற்றுமை குறைவாக உள்ளதாக கூறிய அவர், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். சமூக வலைதளங்களில் திரையுலகினர் பற்றி அவதூறாக சில பேசுவதாகவும், நாம் தவறாக பேசுபவர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் எனவும் கூறினார்.
News September 22, 2025
பள்ளியில் இருந்து ஒன்றாக விளையாடும் கில் – அபிஷேக்

நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கில்(47), அபிஷேக் சர்மா(74) ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்து ஒன்றாக விளையாடி வருகின்றனர். பள்ளியில் இருந்து கில்லுடன் ஒன்றாக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளதாக ஆட்டநாயகன் விருதை வாங்கிய பின் அபிஷேக்கும் குறிப்பிட்டார். இருவருக்கும் யுவராஜ் ஆலோசகராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 22, 2025
பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த போர்ச்சுகல்

இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி <<17787971>>UK, ஆஸ்திரேலியா, கனடா<<>> நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இதற்கு கடும் கண்டனங்களை இஸ்ரேல் தெரிவிக்க, மறுபுறம் பாலஸ்தீன அரசு மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. இந்நிலையில் போர்ச்சுகலும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அடுத்த வாரம் கூடவுள்ள ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பிரான்ஸும் முறைப்படி பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.