News May 9, 2024
நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடிக்கு உத்தரவு

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை ரத்து செய்யக்கோரியும், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரியும் நிர்மலா தேவி உயர்நீதிமன்றத் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் விருதுநகர் சிபிசிஐடி பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Similar News
News August 22, 2025
உக்ரைன் போரை இந்தியா நிரந்தரமாக்குகிறது: USA

50% வரி விதித்தபோதிலும் ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தக உறவை இந்தியா தொடர்கிறது. இதனால், இந்தியா உக்ரைன் மீதான போரை நிரந்தரமாக்குவதாக வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவார்ரோ காட்டமாக தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய்யை வாங்கி, உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரை தொடுப்பதற்கான நிதியை இந்தியா வழங்குவதாகவும் அவர் சாடியுள்ளார். இந்தியா, ஒரு லாப நோக்கத்துடனான சலவை இயந்திரமாக செயல்படுகிறது என்றார்.
News August 22, 2025
BREAKING: தெருநாய் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

டெல்லியில் தெருநாய்களை தனியாக காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், தெருநாய்களை பிடித்து தனியாக காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நாய்களை பிடித்து கருத்தடை ஊசி செலுத்திய பிறகு மீண்டும் நாய்களை வெளியில் விட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
News August 22, 2025
பள்ளி மாணவர்களுக்கு ₹1,500.. இன்று முதல் ஆரம்பம்

2025 – 26 கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு வரும் அக்.11-ம் தேதி நடக்கிறது. அதற்கு தமிழகத்தில் உள்ள +1 படிக்கும் மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். <