News March 18, 2024
ஐ.பெரியசாமி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2006-11ல் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து வரும் நிலையில், அதற்கு தடை விதிக்குமாறு முறையிடப்பட்டது. அதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.
Similar News
News December 19, 2025
JUSTIN: திருப்பூரில் 600 பேர் மீது வழக்கு: காவல்துறை அதிரடி!

திருப்பூர் குமரன் சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட 600 பேர் மீது, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, அனுமதி இன்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 19, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. தமிழக அரசின் திட்டம்

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த TWEES(TN Women Entrepreneurs Empowerment Scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ரேஷன் கார்டு உள்ள 18-55 வயது பெண்கள் வியாபாரம், சேவை, உற்பத்தி தொழில்களுக்கு 25% மானியத்துடன் ₹2 – ₹10 லட்சம் வரை கடன் பெறலாம். கல்வித் தகுதி நிபந்தனை எதுவும் இல்லை. ஆனால், ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு <
News December 19, 2025
மக்களே ரெடியா? வருகிறது குறைந்த கட்டண டாக்ஸி!

கார் டாக்ஸி சேவையில் ஊபர், ஓலா, ராபிடோ ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்திய அரசின் ஆதரவுடன் களமிறங்குகிறது பாரத் டாக்ஸி. வரும் 1-ம் தேதி முதல் டெல்லியில் இதன் சேவை தொடங்கப்பட உள்ளது. ஓலா, ஊபர் சேவைகளில் தற்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மக்களுக்கு குறைந்த கட்டண சேவை, ஓட்டுநர்களுக்கு வருவாயில் 80% வழங்கப்படும் என பாரத் டாக்ஸி தெரிவித்துள்ளது. SHARE IT.


