News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
BREAKING: புதிய ரேஷன் கார்டுகள்.. அரசு அறிவிப்பு

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், TN அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 2021-ம் ஆண்டு மே முதல் தற்போது வரை விண்ணப்பித்தவர்களில் 98.23% பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 20.56 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 30, 2025
தவெகவுக்கும் பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்? வானதி

தவெக கொள்கைக்கும், பாஜக கொள்கைக்கும் என்ன வித்தியாசமென்று விஜய் தெளிவாக சொல்லவேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அதையே இதுவரை சொல்லவில்லை என்ற அவர், விஜய் சினிமா வசனங்களை பேசுவதை போல நாங்களும் பேசமுடியுமா எனவும் கேட்டுள்ளார். மேலும், எந்த வகையில் பாஜக தனக்கு எதிரி என்று விஜய் சொல்லாதவரை, நாங்கள் ஏன் அவரை விமர்சிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 30, 2025
இந்திய அணியில் இணைவாரா ஸ்ரேயாஸ் ஐயர்?

ஜன.11-ல் துவங்க உள்ள நியூசிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் எப்போது இணைவார் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய MCA அதிகாரி ஒருவர், ஸ்ரேயாஸ் தற்போது நலமாக உள்ளார். NZ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


