News December 6, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

image

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 24, 2026

பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு சரிந்தது..

image

நேற்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை, இன்று இறங்குமுகத்தில் தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். மதியம் 12.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,010.90 புள்ளிகள் சரிந்து 82,283.76 புள்ளிகளிலும், நிஃப்டி 287.25 புள்ளிகள் குறைந்து 25,425.75 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. HCL, Mahindra, Infosys, Tata, Wipro உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிகபட்சமாக 5.00% வரை சரிந்துள்ளன.

News February 24, 2026

என்னது.. இந்த கிணறு மரணத்தை கணிக்குமா?

image

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகிலுள்ள சித்தேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில், சந்திரனால் உருவானதாக நம்பப்படும் ‘சந்திரகூப்’ என்ற கிணறு உள்ளது. இது, மரணத்தை முன்னரே தெரியப்படுத்தும் என பக்தர்கள் நம்புகிறார்கள். யாராவது இக்கிணற்றைப் பார்த்து, அவர்களின் பிரதிபலிப்பு அதில் தெரியவில்லை என்றால், அடுத்த 6 மாதங்களில் அவர்கள் மரணிப்பார்கள் என நம்பப்படுகிறது. உங்கள் கருத்து?

News February 24, 2026

8 தொகுதிகளை கேட்கவுள்ளதா CPI?

image

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை CPI அமைத்துள்ளது. வீரபாண்டியன், முத்தரசன், சுப்பராயன், கோ.பழனிசாமி இடம்பெற்றுள்ள இக்குழு பிப்.27-ல் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும். இம்முறை CPI 8 தொகுதிகளை கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி, தளி மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

error: Content is protected !!