News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 18, 2026
அஜித் பவார் மரணம்… CBI விசாரணை கேட்கும் மனைவி

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் மரணத்தில் சதி இருக்கலாம் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சந்தேகித்தனர். மேலும் விசாரணை மந்தமாக நடப்பதாக அவரின் மருமகன் ரோஹித் பவாரும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில்
அஜித் பவாரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது மனைவி DCM சுனேத்ரா பவார் மற்றும் NCP தலைவர்கள், CM தேவேந்திர பட்னாவிஸிடம் கோரிக்கை அளித்துள்ளனர்.
News February 18, 2026
மோடி வருகை.. தீவிரமாகும் கூட்டணி பேச்சுவார்த்தை

மார்ச் 1-ம் தேதி மதுரை மாவட்டத்திற்கும், மார்ச் 6-ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கும் பிரதமர் மோடி வருகிறார். பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்வதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 1-ம் தேதிக்குள் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை NDA கூட்டணியில் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News February 18, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


