News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2026
தமிழக தேர்தலில் இலவச வாக்குறுதி.. SC புதிய முடிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை கோரிய வழக்கினை உடனடியாக விசாரிக்க SC மறுத்துவிட்டது. தேர்தல் காலங்களில் இதுபோன்ற மனுக்கள் வாடிக்கையாவிட்டது எனத் தெரிவித்த SC, இந்த பொதுநல வழக்கை தேர்தலுக்குப்பின் விசாரிப்பதாக கூறியுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் வெளியிட்ட இலவச அறிவிப்புகளுக்கு எவ்வித தடையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
News February 25, 2026
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. காங்கிரஸ் விருப்பம்

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு, இதுவரை திமுக தங்களை அழைக்கவில்லை என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். <<19233813>>ஆட்சி, அதிகாரத்தில் காங்கிரஸ்<<>> இடம்பெற விரும்புவதை மறைமுகமாக குறிப்பிட்ட அவர், பஞ்சாயத்து, உள்ளாட்சி & நகராட்சி தேர்தல்களில் அதிகாரப் பகிர்வுக்கு திமுக ஒப்புக்கொண்டதாவும் தெரிவித்தார். மேலும், தேவையான தொகுதிகளை கேட்டுப்பெறும் முடிவில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News February 25, 2026
தவெகவுடன் கூட்டணியா? கிரிஷ் சோடங்கர் பதில்

கூடுதல் இடங்களை திமுக ஒதுக்காவிட்டால், தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லலாம் எனப் பேசப்படுகிறது. இந்நிலையில், கூட்டணி தொடர்பாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத கிரிஷ் சோடங்கர், அரசியலில் அனைவருடனும் பேச வேண்டும் என்றார். மேலும், காங்கிரஸின் அடிமட்ட பலத்தை அறிந்தே தங்களுடன் கூட்டணி அமைக்க தவெக விரும்புவதாகவும் அவர் கூறினார்.


