News December 6, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

image

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 18, 2026

‘AI’ வளர்ச்சி குறித்து பேசிய PM மோடி – சுந்தர் பிச்சை!

image

டெல்லியில் PM மோடியை, கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் AI துறையில் செய்து வரும் பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக PM மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக AI மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக சுந்தர் பிச்சை கூறியிருந்தார். வரும் 20-ம் தேதி AI மாநாட்டில் அவர் பேச உள்ளார்.

News February 18, 2026

ஸ்டாலினா? மம்தாவா? உடனே முடிவு செய்யுங்கள்: சிவசேனா

image

தலைவரை முதலில் தேர்ந்தெடுங்கள் என்று இண்டியா கூட்டணிக்கு சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா ஆலோசனை தெரிவித்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து, கூட்டணியை ஒருங்கிணைக்கும் தலைவர் மு.க.ஸ்டாலினா, மம்தாவா, அல்லது வேறு ஒருவரா என்பதை உடனே முடிவு செய்யுங்கள் என்றும், உங்களுக்குள் மோதிக் கொள்வதை தவிர்க்காவிட்டால் அது கூட்டணிக்கு ஆபத்தாகும் என்றும் அது எச்சரித்துள்ளது.

News February 18, 2026

₹6,000 வரை விலை உயருகிறது.. உடனே வாங்குவது நல்லது!

image

கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், நடப்பு காலாண்டுக்குள் AC விலை 10 – 15% வரை விலை உயரும் என அத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, AC தயாரிப்புக்கு முக்கியமான செம்பு விலை உயர்வு, அந்நியச் செலாவணி மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாம். இதனால், சுமார் ₹40,000-க்கு விற்பனையாகும் ஒரு AC-ன் விலை சுமார் ₹6,000 வரை விலை உயரும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!