News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. புதிய அறிவிப்பு வந்தது

நாளை(ஜன.14) போகிப் பண்டிகை அன்று அனைத்து விதமான பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னையிலிருந்து 5,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
News January 13, 2026
அமித்ஷாவுக்கு என்ன திமிர்: வைகோ

தமிழகத்தில் மதவாதிகளின் கொட்டம் ஒடுக்கப்படும், இந்துத்துவா சக்திகள் அகற்றப்படும் என வைகோ பேசியுள்ளார். திமுகவை துடைத்தெறிவோம் என அமித்ஷா பேசியதை குறிப்பிட்ட அவர், என்ன திமிர் இருந்தால் 75 ஆண்டு வரலாறு கொண்ட திமுகவை பற்றி அப்படி பேசியிருப்பார் என கொந்தளித்தார். மேலும், திராவிட இயக்கம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் எனவும் திராவிட இயக்க கோட்டையை எவராலும் அழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
News January 13, 2026
ராகு காலம் தெரியும்.. இஷ்டி காலம் தெரியுமா?

அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதி பகுதி & அதனைத் தொடர்ந்து வரும் பிரதமை திதியின் ஆரம்பப் பகுதிகள் இணைந்ததே இஷ்டி காலம். ‘இஷ்டி’ என்பதற்கு யாகம், பூஜை அல்லது அர்ப்பணம் என பொருள். இக்காலத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்தால், இஷ்ட தெய்வத்தின் அருளும், வரங்களும் கிடைக்குமாம். வீட்டு பூஜைகள், ஹோமம், யாகம், தானம், தர்மம், குல தெய்வ வழிபாடு, உலக நன்மைக்கான பிரார்த்தனை செய்வது மிகவும் உகந்ததாம்.


