News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
NDA கூட்டணியில் பெரிய காமெடி: CM ஸ்டாலின்

திமுக கிடப்பில் போட்ட மதுரவாயல் துறைமுகம் சாலை திட்டத்தை பாஜக உயிர்ப்பித்ததாக PM மோடி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள CM ஸ்டாலின், அத்திட்டத்தை தடுத்ததே அதிமுகதான் என PM-க்கு தெரியுமா என கேட்டுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியமைக்கும் என EPS-ம், NDA ஆட்சியமைக்கும் என மோடியும் சொல்வதாக கூறிய அவர், யாருக்கு யார் தலைமை என்பதே தெரியவில்லை என்பதுதான் பெரிய காமெடியே என விமர்சித்திருக்கிறார்.
News March 2, 2026
ரேஷன் அட்டை இல்லாமலே பொருள் வாங்கலாம்.. TRY THIS

மக்களே, ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருள்கள் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? Mera Ration 2.0 செயலி மூலமாக இது சாத்தியமே. இதற்கு, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள். இதில் காட்டும் டிஜிட்டல் ரேஷன் கார்டை வைத்து பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டை தொலைத்துவிட்டால், இதை செய்யுங்கள். இந்த முக்கிய தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணலாமே.
News March 2, 2026
கமேனியின் மரணத்திற்கு இந்தியர்கள் ஏன் அழுகிறார்கள்?

ஈரான் தலைவர் கமேனி மரணத்துக்கு இந்திய முஸ்லிம்கள் ஏன் அழுகிறார்கள் என்ற கேள்வி எழலாம்? அயதுல்லா அலி கமேனி, ஈரான் உயர் தலைவர் மட்டுமல்ல. Shia clergy எனப்படும் ஷியா முஸ்லிம்களின் மத அறிஞர்களின் வரிசையில் முக்கிய ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவராகவும் அயதுல்லா அலி கமேனி கருதப்பட்டார். இதனால், அவரை தங்களின் அரசியல் & மத வழிகாட்டியாக மதித்த ஷியா முஸ்லிம்கள் வேதனையில் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.


