News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
காங்கிரஸ் தான் தமிழர்களை அவமதித்தது: பாஜக

நீதிமன்ற விசாரணையில் உள்ள ஜன நாயகன் குறித்த ராகுல் காந்தியின் கருத்து உள்நோக்கம் கொண்டது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் CR கேசவன் கூறியுள்ளார். மேலும் அன்றைய காங்கிரஸ் அரசு தான், ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்று இழிவாகக் கூறி, தமிழர்களின் உணர்வை அவமதித்தது என்றும், தற்போது திமுக-காங்., கூட்டணி பிளவுபட்டு வருவதை திசைதிருப்பவே ராகுல் அப்பட்டமாக பொய் சொல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News January 13, 2026
மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்

<<18842248>>இலங்கை கடற்படை<<>> சிறைப்பிடித்த 10 ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க தூதரக ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 13, 2026
OPS போன்றே கூட்டணி பற்றி பேசிய பிரேமலதா

கூட்டணி தொடர்பாக தேமுதிக மா.செ.க்களை மீண்டும் அழைத்து பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பை வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்தார். இதற்கு காரணம் ஏற்கெனவே, நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தவெக, சிலர் அதிமுக என விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், OPS போன்றே தை பிறந்தால் வழி பிறக்கும் என பிரேமலதா கூறியுள்ளார்.


