News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
25 மீனவர்கள் சிறைபிடிப்பு… கொந்தளித்த விஜய்

புதுச்சேரியை சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்கள் 25 பேரையும் உடனடியாக மீட்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க TN அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடிதம் எழுதுவதே போதும் என்று CM எண்ணுகிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 16, 2026
BREAKING: நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. எனவே, இன்று பணிநேரம் முடிந்ததும் கடை சாவியை டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, நாளை முதல், தமிழகம் முழுவதும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால், நாளை டாஸ்மாக் கடைகள் திட்டமிட்டபடி இயங்காது.
News February 16, 2026
வீட்டுக் கடன் EMI-ல் முக்கியமாக கவனிக்க வேண்டியது..

வீட்டுக்கடன் வாங்கியவர்கள், சிலர் எதிர்பாராத சந்தர்ப்பங்களில், அதன் EMI கட்ட முடியாத சூழலில் சிக்கி கொள்வார்கள். 3 தவணைகள் அல்லது 90 நாள்களுக்கு மேல் EMI கட்டாமல் இருந்தால், வங்கியே அதை வாராக்கடனாக மாற்றி, கடனை வசூலிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிடும். முதல் EMI தவறியதிலிருந்து 6 மாதங்களுக்கு பிறகே வீடு ஏலத்துக்கு வரும். அதற்குமுன் எப்போது வேண்டுமானாலும் ஒருவர் அவரின் வீட்டை மீட்கலாம்.


