News December 6, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

image

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 22, 2026

வேலூரில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக் <<>>(அ) வேலூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News February 22, 2026

இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

image

மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வேலைவாய்ப்பற்றோருக்கான மாத உதவித்தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள பெண்கள், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை, எளிய குடும்ப பெண்கள், இதில் ஒன்றை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News February 22, 2026

ஆலின் பெற்றோருக்கு PM மோடி புகழாரம்

image

கேரளாவில் உயிரிழந்த 10 மாத குழந்தை ஆலின் ஆபிரஹாமின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், வேறு சில குழந்தைகள் உயிர்பெற்றன. இதை மனதின் குரல் நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்து ஆலின் பெற்றோருக்கு PM மோடி புகழாரம் சூட்டியுள்ளார். குழந்தை இறந்த வலியையும் தாங்கிக் கொண்டு பிறர் நலன் கருதி உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த ஆலின் பெற்றோரின் மன உறுதி போற்றத்தக்கது என PM மோடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!