News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சுழற்சி முறையில், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். 2025-ல், தமிழகத்தின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள 77-வது குடியரசு தின நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பிலான தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
News December 30, 2025
தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சுழற்சி முறையில், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். 2025-ல், தமிழகத்தின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள 77-வது குடியரசு தின நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பிலான தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
News December 30, 2025
கரூர் துயரம்.. தமிழக அரசு பரபரப்பு தகவல்

கரூர் விவகாரம் தொடர்பாக CBI தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கூட்ட நெரிசல் Walkie-talkie மூலம் தவெக தரப்புக்கு கூறப்பட்டதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலுக்கு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளே காரணமென தவெக வைத்த குற்றச்சாட்டையும் அரசு தரப்பு மறுத்துள்ளதாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


