News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2026
நகைக் கடன்.. வெளியான புதிய தகவல்

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகைக் கடன் ஓராண்டு முடியும்போது, வட்டியை மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பிக்க வங்கி அதிகாரிகள் மறுப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். உங்க பகுதியிலும் இந்த பிரச்னை உள்ளதா?
News February 19, 2026
FLASH: நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6:30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், MP, MLA-க்கள் பங்கேற்க வேண்டும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். வரும் 23-ம் தேதி முதல் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் திமுகவினர் வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், அதுகுறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாம்.
News February 19, 2026
கூட்டணி.. இறுதி முடிவை எடுத்த ராமதாஸ்

NDA கூட்டணியில் அன்புமணி இணைந்துவிட்ட நிலையில், எந்த அணியில் இணையலாம் என ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், பிப்ரவரி மாத இறுதிக்குள் கூட்டணி குறித்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என ராமதாஸ் ஆதரவாளரான அருள் MLA உறுதிப்பட தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர், EPS-ஐ சட்டப்பேரவையில் தனியாக சந்தித்து 15 நிமிடங்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.


