News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 18, 2026
தவெகவுக்கு ‘நோ’.. செங்கோட்டையன் ஏமாற்றம்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக EX அமைச்சர் ஒருவரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர் தனக்கு திமுகவில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், அங்கு செல்வதே சிறந்ததாக இருக்கும் என்றும் கூறிவிட்டதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செங்கோட்டையன் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளார். ஏற்கெனவே வைத்திலிங்கத்தை தவெகவில் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
News February 18, 2026
40 நாள்கள் தவக்காலம் இன்று தொடங்கியது

ஈஸ்டர் பெருவிழாவையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலம், சாம்பல் புதனான இன்று தொடங்கியது. இக்காலத்தில் இறைச்சி, மது சாப்பிடாமல் விரதமிருந்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் விழாவாக கொண்டாடுகின்றனர். அதற்கு முந்தைய 40 நாள்கள் இயேசுவின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகின்றனர்.
News February 18, 2026
பணிய வைக்க கனவு காணும் பாஜக: வேல்முருகன்

CBI, ED போன்ற அரசு எந்திரங்களை பயன்படுத்தி அதிமுகவை பணிய வைக்க பாஜக கனவு காண்பதாக வேல்முருகன் சாடியுள்ளார். NDA-வில் CM வேட்பாளர் விவகாரத்தில் டெல்லி தலைமை EPS-ஐ அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பவர் ஷேர் விவகாரத்தில் திமுக, அதிமுக தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் பவர் ஷேர் வேண்டும் என வேல்முருகன் கூறி வருகிறார்.


