News December 6, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

image

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 21, 2026

தாய்மொழிக்காக உயிர்விட்ட மாணவர்கள்.. REWIND

image

1952-ல், டாக்காவில் உருதுவை தேசிய மொழியாக திணிக்கும் முடிவை பாக்., அரசு எடுத்தது. இதனால் வெகுண்டெழுந்த வங்க மக்களும் மொழிப் போராளிகளும் புரட்சியில் இறங்கினர். இதற்காக பிப்.21-ல் அமைதி பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர். இவர்களை நினைவுகூரவே 1999-ல் சர்வதேச தாய்மொழி தினத்தை UNESCO அங்கீகரித்தது. இது 2000 முதல் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.

News February 21, 2026

FLASH: செங்கோட்டையனுக்கு தவெகவில் புதிய பொறுப்பு

image

தவெகவில் சட்டப்பேரவைத் தேர்தல் முதன்மை கண்காணிப்பாளர் பட்டியலை விஜய் வெளியிட்டுள்ளார். அதில், புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்ததாக செங்கோட்டையன் பெயர் இடம் பெற்றுள்ளது. அத்துடன், அவருடன் தவெகவில் இணைந்த EX MP சத்தியபாமாவுக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது, செங்கோட்டையன் தரப்புக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

News February 21, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை, குறைந்த செலவில் நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களை பதிவிட இப்போதே இந்த <>படிவத்தை கிளிக் <<>>செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!