News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
விஜய்யால் விரக்தியில் தவெகவினர்?

கட்சியில் எந்த பணியும் முழுமையாக நடக்கவில்லை என தவெகவினர் குமுறுவதாக கூறப்படுகிறது. அனைத்து மண்டலங்களிலும் பூத் கமிட்டி மாநாடு நடக்கும் என கூறியதோடு சரி, அதை நடத்தவில்லை, மக்களிடம் வாங்கப்பட்ட மனுக்கள் கிடப்பில் உள்ளன, திங்கள்தோறும் நிர்வாகிகளை தலைவர் சந்திப்பார் என கூறப்பட்டது ஆனால் சந்திக்கவில்லை, சுற்றுப்பயணமும் சரிவர நடக்கவில்லை என நிர்வாகிகள் சிலர் விரக்தியில் உள்ளதாக பேசப்படுகிறது.
News February 6, 2026
போதைப் பொருள் வழக்கில் நடிகைகள் கைது.. காரணம்

உயர் ரக போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்த தமிழ் நடிகைகள் வின்சி (எ) நிவேதா & அஞ்சு கிருஷ்ணா உள்பட 9 பேர் கைதாகியுள்ளனர். சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், போதைப் பொருள் விற்பனையில் வின்சி இறங்கியுள்ளார். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கூட்டாளிகளுடன் மீட்டிங் போட்டுள்ளார். மேலும் சில நடிகர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை செய்துள்ளதால் அவர்களையும் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.
News February 6, 2026
மேகாலயா விபத்து: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

<<19059696>>மேகாலயா<<>>வில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்தால், நுழைவு பகுதியில் பாறைகள் விழுந்து மூடியதில், சுரங்கத்திற்குள் பலர் சிக்கியுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படை, போலீசார் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து மேகாலயா CM-மிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்துள்ளார்.


