News December 6, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

image

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 14, 2026

சற்றுமுன்: ₹5,000 ஆக உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு

image

பொங்கல் பரிசாக பல்வேறு அறிவிப்புகளை <<18854282>>தமிழக அரசு<<>> அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றும் பகுதிநேர மகப்பேறு பணியாளர்களுக்கு (RCH) வழங்கப்பட்டு வரும் ₹1,500 மாத சம்பளம் ₹5,000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை ஜன.19-ல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

பெயர்களை நீக்கவும் அதிகாரம் உள்ளது: ECI

image

SIR-ஐ எதிர்த்து SC-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஒருநபரின் குடியுரிமையை தீர்மானிக்கும் வரை, அவரது வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியுமா என்று SC, கேள்வி எழுப்பியது. இதற்கு ECI, சந்தேகத்திற்குரிய சந்தர்ப்பத்தில் குடியுரிமை குறித்து விசாரிக்கவும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கவும் தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று பதிலளித்துள்ளது.

News January 14, 2026

இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

image

₹1,000 மகளிர் உரிமைத் தொகை தற்போது தகுதியான மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமைத் தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்பதை அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, அரசு & தனியார் நிறுவனங்களில் ஊதியம் பெறுபவராக இருக்கக்கூடாது. எந்தவொரு உதவித்தொகையும் பெறக்கூடாது. பள்ளி, கல்லூரி மாணவிகளாக இருக்கக்கூடாது. உரிமைத்தொகை பெறுவோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.

error: Content is protected !!