News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 24, 2026
கணவனை காதலிக்கு விற்பனை செய்த மனைவி

MP-ன் போபாலில் கணவனை, மனைவி ஒருவர் ₹1.5 கோடிக்கு அவரது காதலிக்கு விற்பனை செய்த விநோத சம்பவம் நடந்துள்ளது. அரசு அதிகாரியான 52 வயது பெண், சக ஊழியரான 42 வயது நபரை காதலித்துள்ளார். இவ்விவகாரம் கோர்ட் வரை செல்லவே, விசாரணைக்கு பிறகு குடும்ப நலன் கருதி பணத்தை பெற்றுக் கொண்டு 23 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த கணவனை விட்டு கொடுத்துள்ளார். சினிமாவை விஞ்சிய இச்சம்பவம் SM-ல் பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து?
News February 24, 2026
தொகுதிப் பங்கீடு: திமுக – காங் இடையே இழுபறி

திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 41 தொகுதிகள் வேண்டும் என காங்., விடாப்பிடியாக இருக்கும் நிலையில், திமுகவோ அதிகபட்சமாக 27 மட்டுமே தர முடியும் என கூறிவிட்டதாம். இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், மறுபுறம் சிபிஐ, விசிக, மதிமுகவும் கூடுதல் சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
News February 24, 2026
ம.பி., மசூதி வளாகத்தில் இந்து கோயில் எச்சங்கள்: ASI

ம.பி.,யின் தார் மாவட்டம் போஜ்ஷாலாவில் உள்ள மசூதி, பழங்கால இந்து கோயில்களின் எச்சங்களை பயன்படுத்தி கட்டப்பட்டது என்று இந்திய தொல்லியல் துறை (ASI) ஆய்வு முடிவு கூறுகிறது. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படும் இம்மசூதியில் HC வழிகாட்டுதலின்படி ஆய்வு செய்யப்பட்டது. அகழாய்வுகள், சிலை வடிவமைப்புகள், அறிவியல் ஆய்வுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததன் மூலம் இம்முடிவுக்கு வந்துள்ளதாக ASI கூறியுள்ளது.


