News November 29, 2024
ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க உத்தரவு

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை DGPக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணையில், ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க DGPக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கூறியுள்ளது. அத்துடன், காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற DGP உத்தரவையும் சுட்டிக்காட்டியுள்ளது.
Similar News
News September 8, 2025
இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க USA திட்டமா?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது மேலும் வரிகளை விதித்தால், அவர்கள் அந்நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்கமாட்டார்கள் என USA கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். EU-வுடன் இணைந்து இதை செயல்படுத்தினால், ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்வதோடு, புடினும் வழிக்கு வருவார் என அவர் பேசியுள்ளார். இதனால், இந்தியா மீது மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 8, 2025
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்!

பெரும்பாலான வீடுகளில் மதியம் சமைத்த உணவு மீதமிருந்தால், அதனை சூடுபடுத்தி டின்னருக்கு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சில உணவுகள் கெடவில்லை என்றாலும் அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். SHARE.
News September 8, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

அதிமுகவில் உள்கட்சி பிரச்னை ஒருபுறம் இருக்க அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் அதிருப்தியில் உள்ளோரை திமுக தங்கள் வசம் இழுத்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜி கச்சிதமாக காய்நகர்த்தி வருகிறார். அந்த வகையில், கரூரில் ADMK, BJP, DMDK-வில் இருந்து விலகிய பலர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவர் ஒருவரை இணைக்க செந்தில்பாலாஜி திட்டமிட்டுள்ளாராம்.