News March 27, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நடவடிக்கை விவரங்களை வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனுவில், அதிகாரிகள் மீது துறை ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அவருக்கு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஏப்.25க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News March 26, 2026
சற்றுநேரத்தில் விஜய்யுடன் இணைகிறார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், இன்னும் சற்றுநேரத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார். தவெகவின் பனையூர் அலுவலகத்தில் மதியம் 3 மணிக்கு இணைப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் டி.செல்வதுடன், அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளும் தவெகவில் இணைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 26, 2026
கிச்சனில் பிளாஸ்டிக்.. இவ்வளோ DANGER-ஆ!

பிளாஸ்டிக்கில் உணவு சேமிப்பது உடலுக்கு கெடு விளைவிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் *இறைச்சியை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் பாக்டீரியா, வைரஸ் உருவாகும் *சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் கெமிக்கல்கள் உணவோடு கலக்கும் *எண்ணெய், கொழுப்பு கொண்ட உணவுகள் பிளாஸ்டிக்குடன் வினைபுரிந்து உணவின் தரத்தை கெடுக்கும். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக எவர்சில்வர், கண்ணாடி பாத்திரங்களை உபயோகிப்பது சிறந்தது.
News March 26, 2026
விரைவில் திருமணம்? சாய் பல்லவி சொன்ன பதில்!

தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்டுள்ள நடிகை சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அவரது நடிப்பில் ‘ஏக் தின்’, ‘ராமாயணம்’ போன்ற பாலிவுட் படங்கள் தயாராகி வருகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், உங்களுக்கு திருமணம் எப்போது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும், தான் சிங்கிளாக இருப்பதாகவும் சாய் பல்லவி சிரித்தபடி கூறினார்.


