News April 29, 2024
உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கும் ஆரஞ்சு டீ

க்ரீன் டீயுடன் ஒப்பிடும் போது ஆரஞ்சு டீ ஆறு மடங்கு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஆரஞ்சு டீயை எப்படி தயார் செய்வதென பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு தோல், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நீரூற்றி 1 – 2 நிமிடங்கள் லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஆறிய பின், வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள். இந்த டீயை குடிப்பதால், உமிழ்நீர் சுரப்பதை அதிகரிப்பதோடு ஜீரண சக்தியும் மேம்படுமாம்.
Similar News
News November 14, 2025
காங்கிரஸை மிஞ்சிய AIMIM

பிஹார் தேர்தலில் ஒவைஸியின் AIMIM கட்சி 4 இடங்களை வென்றுள்ளது. ஆம்ரோ தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர் அக்தருல் இமான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கொச்னாதமன், ஜோகிஷாத், பகதூர்கஞ்ச் ஆகிய இடங்களிலும் அக்கட்சி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் காங்கிரஸுக்கு இப்படி ஒரு நிலையா என பலரும் SM-ல் பதிவிட்டு வருகின்றனர்.
News November 14, 2025
இயக்குநரும் நடிகருமான வி.சேகர் மரணம்.. அஞ்சலி

சினிமா இயக்குநரும் நடிகருமான வி.சேகர்(72) உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிர்பிரிந்தது. போரூர் ஹாஸ்பிடலில் உள்ள அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். வி.சேகரின் உடல் நாளை(நவ.15) கோடம்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மாலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. RIP
News November 14, 2025
சொன்னதும் கிடைச்சது, அதற்கு மேலும் கிடைச்சது!

பிஹார் தேர்தல் முடிவு குறித்த அமித்ஷாவின் கணிப்பு, தற்போது பேசுபொருளாகி உள்ளது. NDA கூட்டணி எவ்வளவு தொகுதிகள் வெல்லும் என்று அவரிடம் கேட்ட போதெல்லாம், 160 நிச்சயம், 160+ லட்சியம் என்பது போல 160+ எனப் பதிலளித்தார். ஆனால், தேர்தல் முடிவோ அவரது கணிப்பையும் கடந்து, 203 இடங்களில் தற்போது முன்னிலையில் நிற்கிறது. இதை குறிப்பிட்டு பலரும், அமித்ஷா சரியாக தான் சொன்னார் என SM-ல் பதிவிட்டு வருகின்றனர்.


