News August 17, 2024
நெல்லைக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நீடிப்பின் காரணமாகவும் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று(ஆக.,17) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
Similar News
News October 22, 2025
தீபாவளி விதிமீறல் பட்டியலை வெளியிட்ட எஸ்பி

நெல்லையில் தீபாவளி பண்டிகையின் போது விதிமீறல் தொடர்பாக மொத்தம் 521 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் 83, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 200, அதி வேகமாக வாகனம் ஓட்டியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு நேர விதிமுறை மீறல் சம்பந்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
நெல்லை: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News October 21, 2025
நெல்லை: இன்று பிற்பகல் முதல் சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு இன்று கூடுதலாக 1 நாள் விடுமுறை அளித்துள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்டு வெளியூர் பணிகளுக்கு செல்வதற்காக இன்று மாலை முதல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோவைக்கு தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்.