News August 17, 2024

நெல்லைக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்

image

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நீடிப்பின் காரணமாகவும் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று(ஆக.,17) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Similar News

News December 26, 2025

நெல்லை: ஆட்டோ டிரைவர் திடீர் தற்கொலை!

image

கொக்கிர குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அந்தோணி இருதயம் (35). இவர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தபோது, அவரது உறவினர் பணம் கேட்டு தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. விரக்தியில் இருந்த அவர் வீட்டில் நள்ளிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

நெல்லை அருகே வீட்டில் ஒருவர் மர்ம மரணம்!

image

தாழையூத்து பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி (26). இவரது மனைவி அமுதா தனது தாய் வீட்டிற்கு கடந்த 22ம் தேதி சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டின் உள்புறம் பூட்டியிருந்த நிலையில், கணவர் நீண்ட நேரம் திறக்கவில்லை. இந்நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குமாரசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

நெல்லை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

நெல்லை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0462-2573017, தொழிலாளர் துணை ஆணையர் – 0462-2573017 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!