News August 17, 2024
நெல்லைக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நீடிப்பின் காரணமாகவும் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று(ஆக.,17) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
Similar News
News November 26, 2025
கல்லிடைக்குறிச்சியில் அடுத்தடுத்து 3 சிறுமிகளை கடித்த நாய்

இன்று கல்லிடைக்குறிச்சியில் உள்ள குமார கோவில் நடுத்தெரு அருகே அடுத்தடுத்து மூன்று சிறுமிகளை அப்பகுதியில் உள்ள நாய் கடித்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் சென்று தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்துமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
News November 26, 2025
கல்லிடைக்குறிச்சியில் அடுத்தடுத்து 3 சிறுமிகளை கடித்த நாய்

இன்று கல்லிடைக்குறிச்சியில் உள்ள குமார கோவில் நடுத்தெரு அருகே அடுத்தடுத்து மூன்று சிறுமிகளை அப்பகுதியில் உள்ள நாய் கடித்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் சென்று தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்துமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
News November 25, 2025
நெல்லை முக்கிய ரயில் மணியாச்சியுடன் நிறுத்தம்

நெல்லை வழியாக திருச்செந்தூர் – பாலக்காடு இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா பயணிகள் விரைவு ரயில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று மற்றும் 26, 28, 29 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் – வாஞ்சிமணியாச்சி இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படும். இந்த ரயில் இந்த நாட்களில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு பாலக்காட்டுக்கு புறப்பட்டு செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


