News April 17, 2024
பாஜகவினரை தாக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனிடையே ஓபிஎஸ்-ஐ ஆதரித்து நேற்று ஜெ.பி.நட்டாவின் பிரசாரத்தின் போது ராமநாதபுரம் பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கும், ஓபிஎஸ் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, பாஜகவினரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
Similar News
News August 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 431 ▶குறள்: செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. ▶ பொருள்: இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
News August 18, 2025
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா: எல்.முருகன்

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்கிறார் என எல்.முருகன் விமர்சித்துள்ளார். கூட்டணியில் இருந்து M.P, MLA ஆக வேண்டும் என்பதற்காக பட்டியலின மக்கள் எப்படி போனால் தனக்கு என்ன என்ற எண்ணத்தில் திருமாவளவன் இருப்பதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக பட்டியலின மக்களின் பிரச்சனைகள் பற்றி அவர் வாயே திறக்கவில்லை என்றும், மாறி மாறி பேசி வருவதால் அவர் நிலையாக இல்லை என்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
News August 18, 2025
ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்தவர்கள் RSS: கார்கே

சுதந்திர போராட்ட வீரர்கள் PM மோடியின் பேச்சைக் கேட்டால் வெகுண்டு எழுந்துவிடுவார்கள் என மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் RSS-க்கு பங்கு உண்டு என மோடி சுதந்திர தின உரையில் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய கார்கே, சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த தகவல்களை ஆங்கிலேயர்களுக்கு அளித்தவர்கள் RSS என்றும், அவர்களில் சிலர் ஆங்கிலேயர்களிடம் கருணை மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.