News April 18, 2025
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் OPS

தமிழக முன்னாள் முதல்வர் OPS, கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி அங்கே வந்த அவர், இரண்டு நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திற்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்று இன்று அவர் தேனி புறப்பட்டுச் சென்றார்.
Similar News
News January 10, 2026
குடியரசு தின கொண்டாட்டத்திற்கு தயாராகும் பெரம்பலூர்

மக்களாட்சியின் மாண்பை சிறப்பிக்கும் வகையில், குடியரசு தினத்தையும் கொண்டாடி வருகிறோம். இந்த வகையில் ஜன.26 அன்று, குடியரசு தினத்தை நாடெங்கும் கோலாகலமான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அவற்றின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட சார்பில், இந்திய திருநாட்டில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டதற்கான பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜன.9-ஆம் தேதி நடைபெற்றது.
News January 10, 2026
நகைக்கடைகளில் ஹிஜாப், புர்கா அணிய தடை

பிஹாரில் நகைக்கடைகளில் மாஸ்க் அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுப்பதற்கு புர்கா, ஹிஜாப், ஸ்கார்ப், மாஸ்க், ஹெல்மெட் அணிந்தபடி நகைக்கடைக்குள் ஆடவர், மகளிர் நுழைய அனுமதி இல்லை என அங்குள்ள நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஹிஜாப், புர்காவுக்கு தடைவிதித்தது இந்தியாவின் மத சுதந்திரத்துக்கு எதிரானது என சாடியுள்ளன.
News January 10, 2026
பொங்கல் பரிசு பணம் தாமதம்.. மக்கள் ஏமாற்றம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு பல இடங்களில் தாமதம் ஆவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக ஸ்மார்ட் அட்டையை வைத்து கைரேகைப் பதிவு செய்யும் (POS) கருவி மெதுவாக செயல்படுவதால் பொருள்களை வழங்க ஒரு நபருக்கு குறைந்தது 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. இதனால், நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயனாளிகள், கையொப்பம் பெற்று பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


