News March 17, 2025
ஓபிஎஸ் கேள்வி.. குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்

சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சேகர்பாபுவிடம், ராஜேந்திரன் எம்எல்ஏ (திருவள்ளூர்), திருவாலங்காடு கோயிலில் மாந்திரீக பூஜை செய்ய வசதி செய்து தரப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், அமைச்சர் இதற்கு விளக்கம் தருவாரா என நகைச்சுவையாக கேட்டார். இதைக்கேட்ட இபிஎஸ் குலுங்கி குலுங்கி சிரித்தார். இதையடுத்து எம்எல்ஏ ராஜேந்திரன், பரிகாரபூஜையையே மாந்திரீக பூஜை எனக் கூறியதாகக் கூறினார்.
Similar News
News March 18, 2025
புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் – புதுச்சேரி எம்பி

பாராளுமன்றத்தில் பேசிய புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம், கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக திண்டிவனத்திற்கு ரயில்வே பாதை அமைக்க வேண்டும். புதுச்சேரிக்கு என்று தனியாக வந்தே பாரத் ரயில் இல்லை. எனவே புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். காரைக்கால் பேரளம் ரயில்வே பாதை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
News March 18, 2025
மார்ச் 18: வரலாற்றில் இன்று!

*1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2 ஆண்டுகளில் விடுதலையானார்.
*1858 – டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
*இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்.
*உலக மறுசுழற்சி தினம்.
*ஆசிரியர் நாள் (சிரியா)
*ஆண்கள் மற்றும் போர் வீரர்கள் நாள் (மங்கோலியா)
News March 18, 2025
வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.