News April 1, 2025
பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்

பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் ஒருபுறம் அரசியல் ரீதியாக காய் நகர்த்தி வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி தமிழகம் வரும் மோடியை சந்திக்க, ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, 2026 சட்டமன்றத் தேர்தல், அதிமுக ஒருங்கிணைப்பு, கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவற்றை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 2, 2025
தட்கல் டிக்கெட் கேன்சல்.. பணம் திருப்பி தரப்படுமா?

ரயிலில் அவசர பயணத்திற்காக தட்கல் டிக்கெட் வசதி அமலில் உள்ளது. ஆனால் இந்த டிக்கெட்டை ஏதேனும் காரணத்திற்காக பயணிகள் கேன்சல் செய்தால், டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தரப்படுமா, தரப்படாதா என சந்தேகம் இருக்கும். தட்கல் டிக்கெட் கன்பர்ம் ஆகியிருந்தால், அதற்கான பணம் திருப்பித் தரப்படாது. ஆனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் எனில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டபிறகு பணம் திருப்பித் தரப்படும்.
News April 2, 2025
CISFஇல் 1,161 காலியிடங்கள்.. நாளையே கடைசி நாள்

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள 1,161 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். கான்ஸ்டபிள் நிலையிலான இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி <
News April 2, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.