News January 1, 2025
ரஜினியுடன் ஓபிஎஸ் சந்திப்பு

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை ஓபிஎஸ் சந்தித்து பேசி வருகிறார். உடல்நலம் குறித்து விசாரிக்கவும், புத்தாண்டு வாழ்த்து சொல்லவும் ஓபிஎஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பின் பின்புலத்தில் அரசியல் இருக்காது என்று உறுதியாக சொல்ல முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் கணக்கு, பாஜக கூட்டணி உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
Similar News
News December 15, 2025
தருமபுரியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்!

தருமபுரி ஆட்சியர் ரெ.சதீஷ், இன்று (டிச.15) செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகளுக்கு ரூ.738.63 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்,நேற்று நடைபெற்ற அரசியல் நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 15, 2025
பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகை (PHOTO)

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோருடன் காமெடியில் கலக்கிய நடிகை வாசுகி தற்போது ஆந்திராவில் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். மக்களை சிரிப்பில் ஆழ்த்திய அவர், உடல் நலிவுற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது பெரும் சோகம். ஆந்திர DCM பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் வாசுகிக்கு ₹4 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர் சங்கத்திடமும் அவர் உதவி கோரியுள்ளார்.
News December 15, 2025
அஜித் குமார் மரணம்.. பரபரப்பான புதிய தகவல்

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், 6 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 7-வது குற்றவாளியாக மானாமதுரை DSP சண்முக சுந்தரம் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், SI சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், குற்றஞ்சாட்டப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.


