News September 10, 2025
செங்கோட்டையனுடன் கைகோர்த்த OPS தரப்பு

EPS-க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள செங்கோட்டையன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இந்த சூழலில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையனை ஓபிஎஸ் தரப்பினர் சந்தித்து பேசி வருகின்றனர். இது அரசியலில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. இதனையடுத்து, டிடிவி, ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 5, 2026
மா.செ.க்களிடம் தனித்தனியாக ஆலோசித்த இபிஎஸ்

அதிமுக மா.செ.க்களை தனித்தனியாக தனது வீட்டிற்கு அழைத்து EPS ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக, இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை மா.செ.களிடம் கொடுத்து, யார் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம் என்பது குறித்து கருத்துகளை கேட்டிருக்கிறார். மேலும், தெருமுனை கூட்டணிகளை நடத்துவதோடு, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து, திமுகவிற்கு எதிரான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
News March 5, 2026
ராஜ்யசபா வேட்பாளராக அன்புமணி போட்டி

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 சீட் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பாமக வேட்பாளராக அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றே வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், காலை 10.30 மணிக்கு அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில் அன்புமணி ராஜ்யசபா MP-யாக இருந்துள்ளார். 2004-ல் திமுக கூட்டணியில் MP & மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
News March 5, 2026
தவெகவுடன் கூட கூட்டணி வைப்போம்: மன்சூர் அலிகான்

விஜய்யுடன் கூட கூட்டணி அமைப்போம் என்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். விஜய்க்கு வரும் கூட்டத்தை தான் பார்க்கிறேன் என்ற அவர், தவெகவுக்கு தான் ஆதரவளிப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைவில் விஜய்யை சந்தித்து கூட்டணி நிலைப்பாட்டை மன்சூர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. மன்சூர், 2024 தேர்தலில் வேலூரில் சுயேட்சையாக போட்டியிட்டார்.


