News April 4, 2025
மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்?

ஏப்.6ம் தேதி PM மோடியை, EPS, OPS சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியாக அவரை சந்தித்தாலும், பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அதிமுக சக்திகளையும் ஒன்றிணைப்பது, அதனால் ஏற்படும் சாதகம் & பாதகம், கட்சி அதிகாரம், கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஜெ., மறைவிற்கு பின், பிரிந்து கிடந்த OPS- EPS-ஐ மோடி தான் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 15, 2025
UPI: இந்தியாவில் எது டாப் தெரியுமா?

தற்காலத்தில் கையில் காசு வைத்துக் கொள்ளும் பழக்கம் மறைந்துவருகிறது. எல்லாவற்றுக்கும் UPI மூலம் பணம் செலுத்துகிறோம். இந்தியாவில் செப்டம்பர் 2025 நிலவரப்படி, 19.63 பில்லியனுக்கும் அதிகமான டிரான்சாக்ஷன் நடந்துள்ளன. இதில் PhonePe 48.38% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. GPay 35.08%, Paytm 5.83% அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மற்ற நிறுவனங்கள் – 10.71%. ஆகவுள்ளது. நீங்கள் எந்த UPI யூஸ் பண்றீங்க?
News October 15, 2025
கொலை வழக்கில் பாஜக நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை

கோவையில் இளைஞர் கொலை வழக்கில் பாஜக மண்டலத் துணை தலைவர் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018 -ல் விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் தொடர்பான மோதலில் நாகராஜ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதில் கந்தசாமி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனையுடன், ₹10,000 அபராதமும் விதித்துள்ளது.
News October 15, 2025
BREAKING: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.. ராஜினாமா செய்தார்

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி சொத்து வரி முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனால், 5 மண்டல தலைவர்களை உடனடியாக ராஜினாமா செய்ய CM ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதிமுக சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்திராணியின் ராஜினாமா சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.