News August 15, 2025
EPSஐ விமர்சிக்கும் தகுதி OPSக்கு இல்லை: ஆர்.பி.உதயகுமார்

தலைமை பண்பு இல்லாதவர் EPS என OPS குற்றம்சாட்டிய நிலையில் அதற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இரட்டை இலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த OPS, EPS-ஐ விமர்சிக்க தகுதியற்றவர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், EPS ஆளுமை பண்போடு செயல்படுவதாக பாராட்டிய அவர், தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அடக்குமுறையை கையாண்டுள்ளதாகவும் பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News March 5, 2026
விஜய் கூட்டணியில் பெரிய கட்சி.. சற்றுநேரத்தில் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணியும், திமுக கூட்டணியில் இணைய திருமாவும் முட்டுக்கட்டை போட்டதால், ராமதாஸ் இதுவரை கூட்டணியை அறிவிக்காமல் இருக்கிறார். இந்நிலையில், தைலாபுரம் இல்லத்தில் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி செல்ல ராமதாஸ் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 5, 2026
அது வெறும் குரங்கல்ல.. 13-ம் நாள் காரியம் செய்த மக்கள்!

குரங்கிற்கு காரியமா என தோன்றலாம். ஆனால், ம.பி.,யின் டலபட்புரா மக்கள், அது தங்கள் வீட்டின் அங்கம் என உருகுகின்றனர். பல ஆண்டுகள் தங்களுடன் வாழ்ந்து வந்த குரங்கு விபத்தில் இறந்துவிட கிராமமே சோகத்தில் மூழ்கியது. கண்ணீர் மல்க இறுதி மரியாதை செய்தவர்கள், 13-ம் நாள் காரியமும் செய்துள்ளனர். குரங்கின் போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குரங்குடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர்.
News March 5, 2026
மகளிருக்கு ₹7,000.. தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹5,000 ஏற்கெனவே மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனையடுத்து, அரசு ஓய்வூதியம் பெறும் ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ₹7,000 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், மகளிருக்கு மேலும் சில மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.


