News March 27, 2025
இபிஎஸ்க்கு வார்னிங் கொடுத்த ஓபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இபிஎஸ், தானாக ராஜினாமா செய்யாவிட்டால் அவமானங்களை சந்திக்க நேரிடும் என ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சி அலுவலகத்தைத் தாக்கியதாக ஓபிஎஸ் மீது <<15901584>>இபிஎஸ் <<>>குற்றம்சாட்டியிருந்த நிலையில், நாங்கள் கட்சி ஆபிஸை தாக்கவில்லை, சென்னையில் உள்ள 8 மாவட்டச் செயலாளர்கள்தான் தங்களைத் தாக்கியதாக ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அதிமுக ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிட்டும் என்றார்.
Similar News
News December 4, 2025
காஞ்சி மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வந்த நிலையில், இன்றும் மழை தொடர் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே இன்று வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் அதற்கு ஏற்றவாறு தங்களின் பயணத்தை அமைத்துக் கொள்ளவும். மழை காரணமாக இரண்டு நாள்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 4, 2025
மக்களை திருத்தவே முடியாது: தமிழருவி மணியன்

இனி காமராஜர் மக்கள் கட்சியை நடத்துவதில் பயனில்லை என தமிழருவி மணியன் பேசியுள்ளார். எந்த கைமாறும் இல்லாமல் 16 ஆண்டுகள் கட்சி நடத்தியதாக கூறிய அவர், மக்களிடம் மாற்றம் வராததால் கட்சியை கலைத்து, தன்னுடன் இருந்தவர்களை தமாகாவில் சேர்த்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பணம் எதுவும் வாங்காமல் ஓட்டு போடும் நிலையில் இப்போது மக்கள் இல்லை எனவும் இது திருத்தவே முடியாத சமூகம் என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.
News December 4, 2025
BREAKING: 12 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு.. வந்தது Alert

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், கோவை, ஈரோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்.


