News April 19, 2025
கிராம உதவியாளர்களுக்கு குரல் கொடுத்த ஓபிஎஸ்

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்களை போல காலமுறை ஊதியம் வழங்கப்படாததால் கிராம உதவியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு கால முறை ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், பணியின்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 19, 2025
திமுகவில் ஒன்றியம், நகரங்களை பிரிக்கத் திட்டம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக, கட்சியில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த திமுகவில் ஒன்றியம், நகரங்களை பிரிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திமுக தலைமையகத்தில் கடந்த சில நாள்களாக மாவட்ட செயலாளர்களை அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 52 மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டதில் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
News April 19, 2025
நடிகை ஸ்ரீதேவி மரணம்.. சந்தேகம் எழுப்பும் இந்தி நடிகர்

தமிழ் திரையுலகின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பிறகு, போனி கபூரை திருமணம் செய்து பாலிவுட்டில் செட்டினாலார். 2018-ல் துபாயில் பாத்டப்பில் தடுக்கி விழுந்து அவர் பலியானார். அவர் உயிர் நீத்து 7 ஆண்டுகளாகிய நிலையில், இந்தி நடிகர் நசீர் அப்துல்லா திடீரென சந்தேகம் எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவி மரணத்தில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாகவும், அதற்கான விடைகளை மக்கள் அறிவது அவசியம் என கூறியுள்ளார்.
News April 19, 2025
இரட்டை இலை மேலே தாமரை மலரும்: நயினார்

தமிழக பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக கூட்டணி தொடர்பான கருத்துக்களை யாரும் தெரிவிக்க வேண்டாம் எனவும் தலைமையின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரும் தேர்தலில், இரட்டை இலை மேலே தாமரை மலரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.