News April 2, 2024
இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ஓபிஎஸ்

ராமநாதபுரம் தொகுதியின் பரமகுடி பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது தவறுதலாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட அவர், பழக்க தோஷத்தில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டுவிட்டதாக கூறினார். பின்னர், பலா சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தை மீட்கவே போராடுவதாக பேசினார்.
Similar News
News August 12, 2025
யாருக்கும் யாரும் அடிமை இல்லை: CM ஸ்டாலின் பதிலடி

அடிமைத்தனத்தை பற்றி EPS பேசலாமா என கேள்வி எழுப்பியுள்ள CM ஸ்டாலின், இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை என பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்களுடன் இருப்பது தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி என்றார். DMK கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் அடிமைபோல் செயல்படுவதாக EPS கூறியிருந்த நிலையில், கம்யூனிஸ்ட்டுகளின் கோரிக்கைகளை தான் புறக்கணித்ததில்லை என CM கூறியுள்ளார்.
News August 12, 2025
ஐசிசி விருதை தட்டித் தூக்கிய கில்(லி)..!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி விருது வழங்கி வருகிறது. ஜூலைக்கான விருதை இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் வென்று அசத்தியுள்ளார். கடந்த மாதத்தில் மட்டும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 567 ரன்கள் குவித்திருந்தார். கேப்டனாக செயல்பட்டு இந்த விருதினை முதல் முறை வென்றது மிகவும் சிறப்பானது எனவும் இங்கிலாந்து தொடர் வாழ்வில் நிறைய கற்றுக் கொடுத்துள்ளதாகவும் கில் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை: EPS

மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்பதை ஸ்டாலின் உணர வேண்டும் என EPS கூறியுள்ளார். நேற்று திருப்பூரில் பேசிய ஸ்டாலின், அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி பரப்புரையில் பேசிய EPS, 2021 தேர்தலில் 10 தொகுதிகளிலும் வென்று கோவையில் ஆளுங்கட்சியாக அதிமுக உள்ளதை ஸ்டாலின் மறக்க வேண்டாம் என்றார். உங்கள் கருத்து?