News April 21, 2025
மகா.விலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு

தமிழகத்தை தொடர்ந்து பாஜக ஆளும் மகாராஷ்டிராவிலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. மராத்திக்கு மாற்றாக இந்தியை திணிப்பதாக சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், 3வது மொழியாக இந்தியை கற்பிப்பது மாணவர்களுக்கு சுமையாக அமையும் என மாநில மொழிக் குழுவும் தெரிவித்துள்ளது. ஆனால், மராத்திக்கு மாற்றாக இந்தியை திணிக்கவில்லை என CM பட்நாவிஸ் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
ஊத்துக்குளி அருகே வசமாக சிக்கிய மூவர் அதிரடி கைது

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுற்று பகுதியில் கடந்த 17ஆம் தேதி முத்துக்குமார் என்பவரின் செல்போன் திருடப்பட்டது. இது தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் செல்போனை பறித்துச் சென்ற கபிலன் , வெற்றிச்செல்வன் மற்றும் ராகுல் ஆகியோரை கைது செய்து குற்ற சம்பவத்துக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
News November 19, 2025
SIR பணிகளை முடக்க திமுக சதி: பாஜக

SIR-ஐ எதிர்த்து வருவாய் துறை சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார். SIR பணிகளில் அரசு ஊழியர்கள் ஒத்துழைக்கவில்லை எனில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்காமல், SIR பணிகள் தடைபட வேண்டும் என நினைப்பது ஜனநாயக விரோத செயல் என்றும் சாடியுள்ளார்.
News November 19, 2025
BREAKING: சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

சென்னையில் சவுகார்பேட்டை, கோடம்பாக்கம், அம்பத்தூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலே ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


